செய்திகள் :

சல்மான் ருஷ்டியின் புத்தகத்தைத் தடை செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

post image

ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் ‘தி சட்டானிக் வெர்சஸ்’ எனும் புத்தகத்தைத் தடை செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் புத்தகங்களில் மிகவும் பிரபலமான ‘தி சட்டானிக் வெர்சஸ்’ எனும் புத்தகத்தை இறக்குமதி செய்ய, கடந்த 1988 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு தடை செய்து உத்தரவிட்டது.

தடைக்கான உரிய ஆவணங்களை அதிகாரிகள் சமர்பிக்கத் தவறியதால், தில்லி உயர் நீதிமன்றம் கடந்த 2024 ஆம் ஆண்டு ‘சட்டானிக் வெர்சஸ்’ புத்தகத்தின் மீதான தடையை ரத்து செய்தது.

இதனைத் தொடர்ந்து, வழக்கறிஞர் சந்து குரேஷி என்பவர் உச்ச நீதிமன்றத்தில், சட்டானிக் வெர்சஸ் புத்தகத்தைத் தடை செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மெஹ்தா ஆகியோர் முன்னிலையில், இன்று (செப். 26) நடைபெற்றது. அப்போது, மனுதாரர் தில்லி உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு சவால் விடுப்பதாகக் கூறிய உச்ச நீதிமன்றம், இந்த மனுவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, ‘தி சட்டானிக் வெர்சஸ்’ புத்தகம் தங்களது மதத்தை அவமதிப்பதாகக் கூறி உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 1988 ஆம் ஆண்டு அந்தப் புத்தகத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: செல்போன், மின்னணு சாதனங்களுக்கு ஃபிளிப்கார்டின் எக்ஸ்சேஞ்ச் திட்டம்!

The Supreme Court has dismissed a petition seeking a ban on English author Salman Rushdie's book 'The Satanic Verses'.

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 நிதியுதவி: பிரதமர் தொடங்கி வைத்தார்!

பிகாரில் மகளிர் சுயவேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி தில்லியிலிருந்து இன்று தொடங்கி வைத்தார். பிகாரில் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் 75 லட்சம் பெண்களுக்கு ரூ. 10,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை... மேலும் பார்க்க

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. கிழக்கு நேபாளத்தின் ரமேச்சாப் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

லடாக் வன்முறை: ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது!

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, கல்வியாளர் மற்றும் பருவநிலை ஆர்வலரான சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ளார். யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு, மாநில அந்... மேலும் பார்க்க

மிக்-21 டூ விண்வெளி..! போர் விமான அனுபவத்தை நினைவுகூர்ந்த சுபான்ஷு சுக்லா!

இந்திய விண்வெளி குழுவின் தலைவர் சுபான்ஷு சுக்லா, விமானப்படையின் மிக்-21 போர் விமான பிரியாவிடை நிகழ்வில் கலந்துகொண்டு தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்திய விமானப் படையில் 60 ஆண்டுகளுக்கு மே... மேலும் பார்க்க

இளைஞரின் வயிற்றில் 29 கரண்டிகள், 19 டூத் பிரஷ்கள்: மருத்துவகள் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து 29 ஸ்டீல் ஸ்பூன், 19 டூத் பிரஷ்களை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தில் இந்த வினோதமான சம்... மேலும் பார்க்க

மராத்வாடா விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி நிவாரணம்: மகாராஷ்டிர அரசு!

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தாண்டு பெய்த பருவமழையால் விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவராணம் வழங்க அந்த மாநில அரசு ரூ. 1,500 கோடியை ஒதுக்கியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறிப்பாக எ... மேலும் பார்க்க