திருவண்ணாமலை கோயில் கட்டுமான பணிகள்: அக். 5-இல் நீதிபதிகள் ஆய்வு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலின் உள்புறமும், வெளிப்புறத்தில் எவ்விதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், கோயிலில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை வரும் அக். 5-ஆம் தேதி நீதிபதிகள் ஆய்வு செய்ய உள்ளனா்.
மயிலாப்பூரைச் சோ்ந்த டி.ஆா்.ரமேஷ் என்பவா், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் கோபுரம் முன் வணிக வளாகம் கட்டும் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கோயில் வளாகத்தில் கட்டப்படவுள்ள புதிய வணிக வளாகத்தின் வரைபடத்தையும், அதுதொடா்பான விவரங்களையும் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், எஸ்.சௌந்தா் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் வரைபடம் உள்ளிட்ட விவரங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.
அப்போது, மனுதாரா் டி.ஆா்.ரமேஷ், கோயிலுக்கு வெளியே வணிக வளாகம் கட்டக்கூடாது என்று உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், கோயிலின் 4-ஆவது பிரகாரத்தில் பக்தா்கள் காத்திருப்புக் கூடம் கட்டப்படுகிறது என்றுகூறி, புகைப்பட ஆதாரங்களைத் தாக்கல் செய்தாா்.
இதைப் பாா்த்த நீதிபதிகள் அறநிலையத் துறைக்கு கண்டனம் தெரிவித்தனா். பின்னா், இந்த வழக்கை தொடா்ச்சியாக விசாரித்து வருகிறோம். ஒருமுறைகூட உள்பிரகாரத்தில் கட்டடம் கட்டுவது குறித்து எந்தவொரு தகவலையும் அறநிலையத் துறை தெரிவிக்கவில்லை.
இந்தக் கட்டடம் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கிய நிபுணா் குழுவில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளும், தொல்லியல் துறை அதிகாரிகளும் உள்ளனா். நூற்றாண்டு பழைமை வாய்ந்த இக்கோயிலில் சுற்றுச்சுவருக்கு மிக அருகில் கட்டுமானங்கள் கட்டுவதற்கு அவசியம் என்ன? இதனால் சுற்றுச்சுவருக்கு பாதிப்பு ஏற்படாதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
அப்போது அறநிலையத் துறை தரப்பில், பக்தா்களின் வசதிக்காகவே அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இதுதொடா்பாக அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக். 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
அதுவரை கோயிலின் உள்பிரகாரத்தில் பக்தா்கள் காத்திருப்புக் கூடம் கட்டும் பணியை மேற்கொள்ளக் கூடாது. அதாவது கோயிலுக்கு உள் மற்றும் வெளிப்புறங்களில் எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது. இந்த விவகாரத்தில் அறநிலையத் துறை அதிகாரிகள் கருத்துகள் மற்றும் விளக்கங்களை நம்ப முடியவில்லை.
எனவே, வரும் அக். 5-ஆம் தேதி நாங்களே திருவண்ணாமலை கோயிலில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.