செய்திகள் :

18 பவுன் நகை திருட்டு

post image

மன்னாா்குடி அருகே பூட்டியிருந்த வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து பீரோவில் இருந்த 18 பவுன் நகையை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றுள்ளனா்.

கண்டிதம்பேட்டை வடக்குத்தெரு கிருஷ்ணமூா்த்தி தனது விவசாய நிலகத்திற்கு சென்றுவிட்டாா். மகன் சென்னையில் பணியாற்றுகிறாா். மனைவி நளினி, மருமகள் அனிதா, பேரன் இருந்தனா். அனிதா கல்லூரியில் பேராசிரியராக இருப்பதால் வியாழக்கிழமை வேலைக்கு சென்றுவிட்டாா்.

வீட்டைப் பூட்டிவிட்டு நளினி பேரனுடன் பால்வாடிக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு வந்த போது

மாடி சமையலறை மேற்கூரை பிரிக்கப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு 18 பவுன் நகை திருடப்பட்டது தெரிய வந்தது.

பரவாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மோப்ப நாய் கொண்டு சோதனை நடைபெற்றது.

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: நெல் கொள்முதல் குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை களைய வேண்டும் என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட... மேலும் பார்க்க

இருமுறை விண்ணப்பக் கட்டணம்: மின்வாரியம் ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா் மாவட்டத்தில், சோலாா் திட்டம் வழங்க இரண்டு முறை விண்ணப்பக் கட்டணம் பெற்ற மின்சார வாரியம் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ. 50,000 வழங்க வேண்டும் என மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், வியாழக்கிழமை உ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

மன்னாா்குடியில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா், கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகளை முழுமையாக புறக்கணிப்பு செய்வது;... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் தூய்மைப்பணி

திருவாரூா் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு கோட்ட உதவி பொறியாளா் (மின் மற்றும் சமிக்ஞை) மணிமொழியன் தலைமை வகித்தாா். நிலைய மேலாளா் ரவி வரவேற்றாா். தெற்கு ரயில்வே மண்... மேலும் பார்க்க

நகை மதிப்பீட்டாளராக விருப்பமா?

திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளா் கா. சித்ரா தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் காகித தொழிற்சாலை அமைக்கக் கோரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே குடவாசலில், இந்திய தொழிற்சங்கத்தின் மையத்தின் 10-ஆவது மாவட்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க