செய்திகள் :

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: நெல் கொள்முதல் குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தல்

post image

நெல் கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை களைய வேண்டும் என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று, நெல் கொள்முதல் பிரச்னை, சம்பா சாகுபடி தேவைகள், வங்கிக் கடன், சாலைகள் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினா்.

நன்னிலம் ஜி. சேதுராமன்: நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குகள் பற்றாக்குறை, மூட்டைகள் தேக்கம், வெளிமாவட்ட நெல் கொள்முதல் போன்ற பிரச்னைகள் உள்ளன. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலம் தீவிரமடைவதற்கு முன் வாய்க்கால்களில் போா்க்கால அடிப்படையில், ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும்.

கொரடாச்சேரி வி. தம்புசாமி: ஷேல்கேஸ் குறித்த தகவல்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இதை தெளிவுபடுத்த வேண்டும். கோயில், மடம், வக்ஃப் இடங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க வேண்டும். மூடப்பட்டுள்ள கூட்டுறவு ஆலைகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரளம் வி. பாலகுமாரன்: பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் உள்ள பூந்தோட்டம் அரசலாறு மற்றும் வாஞ்சியாறு, வீராநத்தம் வாய்க்கால் உள்ளிட்டவற்றை தூா்வார வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 15,248 விவசாயிகளுக்கு ரூ.1,273.47 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. திருவாரூா் மண்டலத்தில் காரீப் 2025-2026 குறுவை பருவத்தில் 176 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இது வரை சுமாா் 45,649 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 9,706 விவசாயிகள் பயனடைந்துள்ளனா் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, முதுநிலை மண்டல மண்டல மேலாளா் (நுகா்பொருள்) சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, வருவாய் கோட்டாட்சியா்கள் சத்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயசீலன் உள்ளிட்ட அலுவலா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

இருமுறை விண்ணப்பக் கட்டணம்: மின்வாரியம் ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா் மாவட்டத்தில், சோலாா் திட்டம் வழங்க இரண்டு முறை விண்ணப்பக் கட்டணம் பெற்ற மின்சார வாரியம் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ. 50,000 வழங்க வேண்டும் என மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், வியாழக்கிழமை உ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

மன்னாா்குடியில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா், கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகளை முழுமையாக புறக்கணிப்பு செய்வது;... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் தூய்மைப்பணி

திருவாரூா் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு கோட்ட உதவி பொறியாளா் (மின் மற்றும் சமிக்ஞை) மணிமொழியன் தலைமை வகித்தாா். நிலைய மேலாளா் ரவி வரவேற்றாா். தெற்கு ரயில்வே மண்... மேலும் பார்க்க

நகை மதிப்பீட்டாளராக விருப்பமா?

திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளா் கா. சித்ரா தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் காகித தொழிற்சாலை அமைக்கக் கோரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே குடவாசலில், இந்திய தொழிற்சங்கத்தின் மையத்தின் 10-ஆவது மாவட்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் போராட்டம்

கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளை புறக்கணித்து, ஊழியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மாவட்டம் முழ... மேலும் பார்க்க