செய்திகள் :

கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?

post image

கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் கோட்டை பாளையம் பகுதியில் கிரேசி ஹேப்பி ஹோம் டிரஸ்ட் என்கிற பெயரில் ஓர் தனியார் காப்பகம் இயங்கி வருகிறது. அங்குப் பெற்றோர் இல்லாத சுமார் 26 குழந்தைகளைப் பராமரிப்பதாகக் கூறப்படுகிறது.

சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி
சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி

சராசரியாக 6 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகள் காப்பகத்தின் காப்பாளராக உள்ள செல்வராஜ் என்பவர் சிறுவர்களை பெல்டால் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்தச் சம்பவம் குறித்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். செல்வராஜால் தாக்கப்பட்ட சிறுவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தினர். காப்பகத்தில் உள்ள மற்ற சிறுவர்கள், பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

காப்பகம்
காப்பகம்

செல்வராஜின் மனைவி நிர்மலாதான் காப்பகத்தின் அறங்காவலராக உள்ளார். அவர்கள் இருவரிடமும் காவல்துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை விசாரணை நடத்தினர். அதில் செல்வராஜ் சிறுவர்களை பெல்டால் தாக்கியது உறுதியானது.

இரண்டு சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் கோபமடைந்து செல்வராஜ், அவர்களை பெல்டால் தாக்கியது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்புத்துறை சார்பில் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

காப்பக நிர்வாகி செல்வராஜ்

அந்தப் புகார் அடிப்படையில் காவல்துறையினர் செல்வராஜ் மற்றும் நிர்மலா மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து செல்வராஜைக் கைது செய்து சிறையில் அடைத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்வராயன் மலை: கோழியை நோக்கிச் சீறிய துப்பாக்கி குண்டு - இளைஞரின் உயிரைக் காவு வாங்கியது எப்படி?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது கல்வராயன் மலை. இங்கு 50 வருவாய் கிராமங்களும், 170-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் இருக்கின்றன. இந்த கிராமங்களைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாகவும், விலங்குகள... மேலும் பார்க்க

நெல்லை: கோழிகளைத் தூக்கிச் செல்ல முயன்ற சிறுத்தை; தொடர் அட்டகாசத்தால் அச்சத்தில் மக்கள்

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், மிளா, சிங்கவால் குரங்கு, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.இந்த விலங்குகள்... மேலும் பார்க்க

கோவை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை; போக்சோ சட்டத்தில் கபடி மாஸ்டர் கைது

கோவை சூலூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். அதே சூலூரைச் சேர்ந்த அருண்குமார் (38). இவர் கபடி மற்றும் கைப்பந்து போட்டிகளுக்கான பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.கோவை அங்... மேலும் பார்க்க

சென்னை: இரண்டு திருமணம்; பலருடன் சாட்டிங் - திருட்டு வழக்கில் சிக்கிய அறிமுக நடிகரின் பின்னணி!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் சுமதி (பெயர் மாற்றம்). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்து விட, மாமியார், இரண்டு மகன்களுடன் வசித்து வ... மேலும் பார்க்க

குடியாத்தம் குழந்தை கடத்தல் விவகாரம்; 2 இளைஞர்கள் கைது - பணம் பறிக்கத் திட்டமிட்டு துணிகரம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை பவளக்காரத் தெருவைச் சேர்ந்தவர் வேணு (வயது 33). இவரின் மனைவி ஜனனீ (28). இவர்களது மூன்றரை வயது குழந்தை யோகேஷ், நேற்று மதியம் 12.20 மணியளவில் மர்ம நபர்கள... மேலும் பார்க்க

சட்டவிரோத மண் விற்பனை: ”நாளைக்கு நாங்கள் இல்லாமல் போகலாம்”- முதல்வர் பாராட்டிய நிமல் ராகவன் ஆதங்கம்!

பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டில் அமைந்துள்ள செம்புரான் குளத்தில் மண் எடுக்கப்பட்டு தனியாரிடம் விற்பனை செய்து வந்துள்ளனர். இது குறித்து பாக்கியம் நகரைச் சேர்ந்த நீர் நிலைகள் மீட்பு பண... மேலும் பார்க்க