செய்திகள் :

குடியாத்தம் குழந்தை கடத்தல் விவகாரம்; 2 இளைஞர்கள் கைது - பணம் பறிக்கத் திட்டமிட்டு துணிகரம்!

post image

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை பவளக்காரத் தெருவைச் சேர்ந்தவர் வேணு (வயது 33). இவரின் மனைவி ஜனனீ (28). இவர்களது மூன்றரை வயது குழந்தை யோகேஷ், நேற்று மதியம் 12.20 மணியளவில் மர்ம நபர்களால் காரில் கடத்திச்செல்லப்பட்டான். தலையில் ஹெல்மட் அணிந்து, கையில் கிளவுஸ் மாட்டிக்கொண்டு வீட்டுக்குள் மிளகாய் பொடியுடன் புகுந்த ஒருவன், தந்தை வேணுவின் முகத்தில் மிளகாய் பொடியை அடித்துவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு காரில் ஏறினான்.

குழந்தை கடத்தல் சிசிடிவி காட்சிகள்

மகனை மீட்பதற்காக காரின் பின்பக்க கதவை எட்டிப்பிடித்த வேணு தரதரவென சாலையில் இழுத்துசெல்லப்பட்டு கீழே விழுந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பதைபதைக்க வைத்தன. இது குறித்து தகவலறிந்ததும், வேலூர் மாவட்ட எஸ்.பி மயில்வாகனன் காவல்துறையினரை முடுக்கிவிட்டு சுங்கச்சாவடிகள் மற்றும் மாநில எல்லையோர சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினார்.

மதியம் 2.30 மணியளவில், திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் அருகேயுள்ள தேவிகாபுரம் பகுதியில் குழந்தை யோகேஷை கடத்தல் நபர்கள் இறக்கிவிட்டு சென்றதாக தெரியவந்ததையடுத்து, போலீஸார் அங்கு விரைந்து சென்று குழந்தையை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து, பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்கு குழந்தையின் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் குழந்தையை எஸ்.பி மயில்வாகனன் ஒப்படைத்தார்.

கைது செய்யப்பட்ட பாலாஜி, விக்கி என்ற விக்ரமன்

தொடர்ந்து, குழந்தையை கடத்திய நபர்களை பிடிக்கவும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையில், குடியாத்தம் பவளக்காரத் தெருவில் வேணுவின் வீட்டருகே வசிக்கும் இளைஞர்கள் இருவரே கடத்தலில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, கடத்தலில் தொடர்புடைய பாலாஜியை நேற்று இரவு கைது செய்த போலீஸார், மற்றொருவருரான விக்கி என்ற விக்ரமனை இன்று பிடித்து கைது செய்திருக்கின்றனர். இருவரும் பணம் பறிக்கும் திட்டத்துடன் குழந்தையை கடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத மண் விற்பனை: ”நாளைக்கு நாங்கள் இல்லாமல் போகலாம்”- முதல்வர் பாராட்டிய நிமல் ராகவன் ஆதங்கம்!

பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டில் அமைந்துள்ள செம்புரான் குளத்தில் மண் எடுக்கப்பட்டு தனியாரிடம் விற்பனை செய்து வந்துள்ளனர். இது குறித்து பாக்கியம் நகரைச் சேர்ந்த நீர் நிலைகள் மீட்பு பண... மேலும் பார்க்க

``உங்க ஆதாரில் தீவிரவாதிகள் சிம் வாங்கி பணப் பரிவர்த்தனை'' - முதியவரை மிரட்டி ரூ.23 கோடி கொள்ளை

தொடரும் டிஜிட்டல் கைது மோசடி சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு, மும்பை கிரைம் பிராஞ்ச் என்று பல பொய்களைச் சொல்லி அப்பாவி பொதுமக்களை டிஜிட்டல் முறையில் போலியாகக் கைது செய்து அவர்களிடம் இருக்கும் மொத்தப் பணத்தைய... மேலும் பார்க்க

``ரகசிய கேமரா, பாலியல் சீண்டல்'' - மாணவிகள் புகார், டெல்லி சாமியார் தலைமறைவு - நடந்தது என்ன?

மாணவிகள் புகார் டெல்லி விகார் குஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்வி நிறுவனத்தில் இயக்குநராக இருந்தவர் சுவாமி பார்த்தசாரதி. சுவாமி பார்த்தசாரதி அக்கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவிகளை இரவு ந... மேலும் பார்க்க

வத்தலகுண்டு: உதவி செய்வது போல் நடித்து ரூ. 10 லட்சம் திருட்டு; 2 மணி நேரத்தில் பணத்தை மீட்ட போலீஸ்

மதுரை மாவட்டம் டி.வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம் (80). இவர் கோயமுத்தூரில் உள்ள தனது மகன் வீட்டிற்குச் சென்று விட்டு அங்கிருந்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள வங்கிக் கணக்கிற்கு ரூ. 10... மேலும் பார்க்க

``அமித் ஷா, அஜித் தோவலிடம் கான்பரன்ஸ் கால்'' - வங்கி அதிகாரியிடம் ரூ.4 கோடி மோசடி செய்த உறவினர்கள்

தினம் தினம் பொதுமக்கள் ஏதாவது ஒரு வழியில் மோசடியால் பாதிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். இதில் டிஜிட்டல் கைது மோசடி ஒட்டுமொத்த நாட்டையும் கலங்கடித்துக்கொண்டிருக்கிறது. புனேயைச் சேர்ந்த ஓய்வு பெற... மேலும் பார்க்க

டெல்லி ஆசிரமத்தில் ரெய்டு: கல்லூரி மாணவிகள் 17 பேருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் தலைமறைவு

டெல்லியைச் சேர்ந்த மதகுரு சுவாமி சைதன்யானந்தா என்று அழைக்கப்படும் பார்த்த சாரதி சொந்தமாக மேனேஜ்மெண்ட் கல்லூரி ஒன்றின் நிர்வாகியாக இருந்து வருகிறார். வசந்த் குஞ்ச் பகுதியில் செயல்படும் ஸ்ரீ சாரதா இன்ஸ்... மேலும் பார்க்க