செய்திகள் :

இந்த உலகக் கோப்பைத் தொடருக்காக காத்திருக்கிறோம்: ஸ்மிருதி மந்தனா

post image

அணியில் உள்ள அனைவரும் போட்டியை வென்று கொடுப்பவர்கள் என தங்கள் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் இன்னும் 5 நாள்களில் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன. செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், இந்த உலகக் கோப்பைத் தொடருக்காக காத்திருப்பதாகவும், அணியில் உள்ள அனைவரும் போட்டியை வென்று கொடுப்பவர்கள் என தங்கள் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர் எனவும் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: இந்திய அணியின் நம்பிக்கையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறேன். ஒவ்வொரு போட்டியிலும் கடினமாக உழைத்து வெற்றி பெறுவதற்காக போராடுகிறோம். அணியில் உள்ள ஒவ்வொரும் தங்களை போட்டியை வென்று கொடுப்பவர்களாக பார்க்கத் தொடங்கியுள்ளனர். அவர்களால் போட்டியை வென்று கொடுக்க முடியும் என நம்புகிறார்கள்.

கடந்த டி20 உலகக் கோப்பை என்னைப் பெரிய அளவில் பாதித்தது. இது போன்ற சூழ்நிலையை மீண்டுமொருமுறை நாம் சந்திக்கக் கூடாது நினைத்துக் கொண்டேன். அந்த டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, ஃபிட்னஸில் நல்ல முன்னேற்றம் இருந்தது. போட்டிகளில் நன்றாக செயல்பட முடிந்தது.

நாங்கள் அனைவருமே எதிர்வரும் உலகக் கோப்பைத் தொடரை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறோம். கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து மகளிர் கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. திடலில் ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பார்ப்பதற்கு ஆவலாக உள்ளது. மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அதிக அளவிலான ரசிகர்கள் முன்பு விளையாடி பழகியதால், எங்களுக்கு பெரிய அளவில் அழுத்தம் இருக்காது என்றார்.

முதல் முறையாக ஐசிசி உலகக் கோப்பையை வெல்லும் கனவோடு இந்திய அணி களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

India vice-captain Smriti Mandhana said that everyone in the team has started believing in themselves as the ones who can win the match.

இதையும் படிக்க: ரிஷப் பந்த் மீண்டும் இந்திய அணியுடன் இணைவது எப்போது? அஜித் அகர்கர் பதில்!

ரிஷப் பந்த் மீண்டும் இந்திய அணியுடன் இணைவது எப்போது? அஜித் அகர்கர் பதில்!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயத்திலிருந்து மீண்டு எப்போது அணியுடன் மீண்டும் இணைவார் என்பது குறித்து இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் பேசியுள்ளார்.மேற்கிந்தியத் தீவுகள்... மேலும் பார்க்க

கருண் நாயரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியா? - அஜித் அகர்கர் சூசகம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இருந்து கருண் நாயர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது குறித்து அணித் தேர்வர் அஜித் அகர்கர் சூசகமாக பதிலளித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்... மேலும் பார்க்க

சென்னை டூ சிட்னி..! அஸ்வினை வரவேற்று விடியோ வெளியிட்ட சிட்னி தண்டர்!

இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் தொடரில் இணைந்ததை வரவேற்று சிட்னி தண்டர் அணி விடியோ வெளியிட்டுள்ளது.இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியைப் போன்று ஆஸ்திரேலியாவில் ந... மேலும் பார்க்க

இந்திய அணி அழுத்தத்திலிருந்து விடுபட இதனை செய்ய வேண்டும்: முன்னாள் ஆஸி. கேப்டன்

ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் சொந்த மண்ணில் விளையாடும் அழுத்தத்திலிருந்து விடுபட இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லேனிங் பேசியுள்ளார்.ஐசிசி மகளிர்... மேலும் பார்க்க

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து 6 மாதங்களுக்கு ஓய்வு கேட்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர்!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனக்கு 6 மாதங்களுக்கு ஓய்வளிக்க வேண்டுமென இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளார்.ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணி இன்ற... மேலும் பார்க்க

மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் 3 தமிழர்கள் சேர்ப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஷுப்மன் கில் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகள் அக்.2 முதல் அக்.14ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. இந்தியாவுக... மேலும் பார்க்க