செய்திகள் :

நெல்லை: கோழிகளைத் தூக்கிச் செல்ல முயன்ற சிறுத்தை; தொடர் அட்டகாசத்தால் அச்சத்தில் மக்கள்

post image

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், மிளா, சிங்கவால் குரங்கு, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த விலங்குகள் இரை மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் உள்ள ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

குறிப்பாக பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், வேம்பையாபுரம், திருப்பதியாபுரம், அகஸ்தியர்புரம், கோட்டைவிளைபட்டி போன்ற இடங்களில் சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து ஆடு, மாடு, கோழி போன்றவற்றைக் கடித்து இரையாக உண்பதை வாடிக்கையாக்கியுள்ளன.

கூண்டுக்குள் சிறுத்தை
கூண்டுக்குள் சிறுத்தை

இது ஒருபுறமிருக்க யானை, காட்டுப்பன்றிகள் விளை நிலங்கள், தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. வன விலங்குகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தக் கோரி வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பொதிகையடி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். மின்வாரிய ஊழியரான இவர் கோழி, புறா நாய் போன்ற பிராணிகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் சங்கரின் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை உறுமல் சத்தத்துடன் கோழிக்கூட்டின் மீது ஏறி கூட்டை வாயால் திறந்து கோழிகளைத் தூக்க முயன்றது. உறுமல் சத்தம் கேட்டு எழுந்த சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் பாத்திரங்களைத் தட்டி ஓசை எழுப்பினர்.

அந்தச் சத்தம் கேட்ட சிறுத்தை தப்பியோடியது. ஏற்கெனவே இப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கரடிகள் குட்டிகளுடன் சுற்றி வருகின்றன. இதில் ஒரு கரடியைக்கூட கூண்டு வைத்து வனத்துறையினர் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை
குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை

இந்தச் சூழலில் தற்போது சிறுத்தை நடமாட்டமும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். நள்ளிரவு நேரத்தில் சுற்றி வந்த கரடி, சிறுத்தைகள் மக்கள் நடமாட்டமுள்ள நேரத்திலும் வலம் வருவதால் பொதுமக்களைத் தாக்கவும் வாய்ப்புள்ளதால் மேலும் அச்சத்தில் உள்ளனர்.

இதனால், வனத்துறையினர் கரடிகளைக் கூண்டு வைத்துப் பிடிப்பதுடன், இரவு நேரங்களிலும் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

கல்வராயன் மலை: கோழியை நோக்கிச் சீறிய துப்பாக்கி குண்டு - இளைஞரின் உயிரைக் காவு வாங்கியது எப்படி?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது கல்வராயன் மலை. இங்கு 50 வருவாய் கிராமங்களும், 170-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் இருக்கின்றன. இந்த கிராமங்களைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாகவும், விலங்குகள... மேலும் பார்க்க

கோவை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை; போக்சோ சட்டத்தில் கபடி மாஸ்டர் கைது

கோவை சூலூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். அதே சூலூரைச் சேர்ந்த அருண்குமார் (38). இவர் கபடி மற்றும் கைப்பந்து போட்டிகளுக்கான பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.கோவை அங்... மேலும் பார்க்க

கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?

கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் கோட்டை பாளையம் பகுதியில் கிரேசி ஹேப்பி ஹோம் டிரஸ்ட் என்கிற பெயரில் ஓர் தனியார் காப்பகம் இயங்கி வருகிறது. அங்குப் பெற்றோர் இல்லாத சுமார் 26 குழந்தைகளைப் பராமரிப்பதாக... மேலும் பார்க்க

சென்னை: இரண்டு திருமணம்; பலருடன் சாட்டிங் - திருட்டு வழக்கில் சிக்கிய அறிமுக நடிகரின் பின்னணி!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் சுமதி (பெயர் மாற்றம்). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்து விட, மாமியார், இரண்டு மகன்களுடன் வசித்து வ... மேலும் பார்க்க

குடியாத்தம் குழந்தை கடத்தல் விவகாரம்; 2 இளைஞர்கள் கைது - பணம் பறிக்கத் திட்டமிட்டு துணிகரம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை பவளக்காரத் தெருவைச் சேர்ந்தவர் வேணு (வயது 33). இவரின் மனைவி ஜனனீ (28). இவர்களது மூன்றரை வயது குழந்தை யோகேஷ், நேற்று மதியம் 12.20 மணியளவில் மர்ம நபர்கள... மேலும் பார்க்க

சட்டவிரோத மண் விற்பனை: ”நாளைக்கு நாங்கள் இல்லாமல் போகலாம்”- முதல்வர் பாராட்டிய நிமல் ராகவன் ஆதங்கம்!

பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டில் அமைந்துள்ள செம்புரான் குளத்தில் மண் எடுக்கப்பட்டு தனியாரிடம் விற்பனை செய்து வந்துள்ளனர். இது குறித்து பாக்கியம் நகரைச் சேர்ந்த நீர் நிலைகள் மீட்பு பண... மேலும் பார்க்க