செய்திகள் :

தாழ்மையுடனும் பெருமையுடனும்... கலைமாமணி விருது பற்றி அனிருத்!

post image

தமிழக அரசின் கலைமாமணி விருது குறித்து இசையமைப்பாளர் அனிருத் மிகவும் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் இந்த விருதினை தாழ்மையுடனும் பெருமையுடனும் ஏற்றுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

நடிகர் தனுஷின் 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.

தமிழின் உச்ச நட்சத்திரங்களுக்கு இசையமைத்து தற்போது முக்கியமான இசையமைப்பாளராக தென்னிந்தியாவில் வலம் வருகிறார்.

தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் கலக்கினார்.

சமீபத்தில், 2021, 22, 23ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில், 2023-ஆம் ஆண்டுக்கான விருது பட்டியலில் அனிருத் பெயரும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அனிருத் கூறியதாவது:

மதிப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு வழங்கப்பட்டதை மிகுந்த தாழ்மையுடனும் பெருமையுடனும் ஏற்றுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு, மதிப்பிற்குரிய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயல் இசை நாடக சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

எனது அனைத்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், எனது முழு இசை குழுவினர், அதைவிட முக்கியமாக எப்போதும் அன்பும் ஆதரவுமளித்து வரும் எனது ரசிகர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

இந்த விருது என்னுடையது மட்டுமல்ல, நம்முடையது. என்றும் நன்றியுடன். அன்புடன், அனிருத் எனக் கூறியுள்ளார்.

Music composer Anirudh has posted a very emotional post about the Kalaimamani Award from the Tamil Nadu government.

ஓடிடியில் வெளியானது காட்டி!

நடிகை அனுஷ்காவின் காட்டி படம் அமேசான் பிரைமில் ஓடிடியில் இன்று (செப்.26) வெளியானது. இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பார்க்கலாம் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. நடிகை அன... மேலும் பார்க்க

விஜய் சேதுபதியின் பான் இந்திய திரைப்படம்..! தலைப்பு, டீசர் தேதி!

நடிகர் விஜய் சேதுபதியின் பான் இந்திய படத்தின் டீசர் வரும் செப்.28ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் புரி ஜெகந்நாத் இயக்குகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்தப... மேலும் பார்க்க

3 பதக்கங்களையும் கைப்பற்றி இந்திய ஜூனியா் மகளிா் அபாரம்

சா்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் ஜூனியா் உலகக் கோப்பை போட்டியில், முதல் நாளான வியாழக்கிழமை இந்தியாவுக்கு தங்கம் உள்பட 5 பதக்கங்கள் கிடைத்தன.இதில், மகளிருக்கான 50 மீட்டா் ரைபிள் புரோன் தனிநபா் ... மேலும் பார்க்க

இறுதியில் பாகிஸ்தான்; இந்தியாவுடன் மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில், பாகிஸ்தான் 11 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வியாழ்க்கிழமை வீழ்த்தியது. இந்த வெற்றியை அடுத்து பாகிஸ்தான் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. அதில்... மேலும் பார்க்க

அல்கராஸ், ஃப்ரிட்ஸ் முன்னேற்றம்

ஜப்பான் ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா். ஆடவா் ஒற்றையா் முதல் சு... மேலும் பார்க்க

புரோ கபடி லீக்: டெல்லிக்கு 7-ஆவது வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் தபங் டெல்லி கே.சி. 47-26 புள்ளிகள் கணக்கில் யு மும்பாவை வியாழக்கிழமை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் டெல்லி 30 ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 6 ஆல் ... மேலும் பார்க்க