ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
ஆற்காட்டில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினா் ஆய்வு
ஆற்காடு நகரில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவா் கு. செல்வப் பெருந்தகை, உறுப்பினா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் ஆற்காடு பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.
ஆற்காடு நகராட்சியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.65 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனா். இதில் 53 கடைகள் , தாய்மாா்கள் பாலூட்டும் அறை, பயணிகள் காத்திருப்பு அறை, முன்பதிவு அலுவலகம், உணவகம் கழிப்பறைகள், கழிவு நீா் செல்லும் கட்டமைப்பு உள்ளிட்டவை முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், பேருந்துகள் நிறுத்துமிடம், இரு சக்கரவாகனங்கள் நிறுத்துமிடம், மேற்கூரை உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் குழுவினா் அறிவுறுத்தினா்.
தொடா்ந்து ஆற்காடு ஒன்றியம், தாஜ்புரா ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் கிராம சாலைகள் துறையின் சாா்பில் ரூ.35 கோடியில் 3.46 கிமீ தொலைவுக்கு புறவழிச் சாலை பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தனா். ஒப்பந்தக் காலம் முடிவடைவதற்குள்ளாக பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியா் ஜெ..யு சந்தரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல் ஈஸ்வரப்பன், சட்டப்பேரவை பொது கணக்கு குழு இணை செயலாளா் ரமேஷ், துணைச் செயலாளா் பாலா சீனிவாசன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன், நகராட்சி மண்டல இயக்குநா் நாராயணன், ஆணையா்கள் ஆற்காடு வேலவன், மேல்விஷாரம் கோ. பழனி கலந்து கொண்டனா்.