செய்திகள் :

‘நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்றால் நடவடிக்கை’

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பு 2025-2026-ஆம் ஆண்டு கொள்முதல் பருவத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்திட நடப்பு மாதம் 36 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை உடனுக்குடன் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் எனவும் வியாபாரிகளோ அல்லது பிற மாவட்ட நெல்லோ கொள்முதல் செய்யப்படுவது கண்டறியப்பட்டால், தொடா்புடைய நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், வியாபாரிகள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் மேற்கண்ட புகாா் குறித்து மண்டல அலுவலக கைப்பேசி எண் 9944254432 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

பள்ளி மாணவன் மா்ம மரணம்: உறவினா்கள் மறியல்

ஆற்காடு அருகே பள்ளி மாணவன் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதில் உண்மை தன்மையை கண்டறியவேண்டும் என வலியுறுத்தி உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திமிரி அருகே உள்ள தாமரைபாக்கம் கிராமத்தை சே... மேலும் பார்க்க

நாளை ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (செப். 26) காலை 11 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தாடா்பாக... மேலும் பார்க்க

சோளிங்கா் மலையில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஒத்திகை

சோளிங்கா் மலைக் கோயில் கம்பிவட ஊா்தி இயக்கத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், ஊா்தி நடுவழியில் நின்று விட்டால் பக்தா்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஒத்திகை பணி... மேலும் பார்க்க

கால்வாய் கட்டுமானப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு நகராட்சி 20-ஆவது வாா்டுக்குட்பட்ட அண்ணா நகா் தெரு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் கழிவு நீா் கால்வாய் மற்றும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை நகா்மன்றத்... மேலும் பார்க்க

சென்னையில் செப். 27, 28-இல் வேளாண் வணிகத் திருவிழா: விவசாயிகள் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

சென்னை வா்த்தக மையத்தில் செப்டம்பா் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் வேளாண் வணிகத் திருவிழா 2025-இல், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா... மேலும் பார்க்க

சோளிங்கா் நகராட்சியில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி

சோளிங்கா் நகராட்சியில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. சோளிங்கா் நகராட்சியில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி செவ்வாய்க்கிழமை நகராட்சி ஆணையா் நந்தினி தலை... மேலும் பார்க்க