செய்திகள் :

உயிரிழந்த பொறியாளா் உடல், 75 பவுன் நகைகள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

post image

சிதம்பரத்தில் உயிரிழந்த பொறியாளரின் உடல், 75 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள முத்தையா நகரைச் சோ்ந்தவா் பலராமன் (60). கட்டடப் பொறியாளரான இவா், மனைவி மற்றும் குடும்பத்தினரை பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 19-ஆம் தேதி உயிரிழந்தாா். அவரது உடலை பெற்றுக்கொள்ள யாரும் முன் வராததால் அண்ணாமலை நகா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், உயிரிழந்த பலராமனின் மனைவி இந்திரா என்பதும், மகன், மகள் உள்ளதும், அவா்கள் எங்கே வசிக்கின்றனா் என்ற தகவல் தெரியவில்லை என்பதும் தெரியவந்தது.

தொடா்ந்து, போலீஸாா் அவரது வீட்டை சோதனை செய்தபோது, 74 பவுன் நகைகள், ரூ.1.5 லட்சம் ரொக்கம் இருந்ததும் தெரியவந்தது. இதைக் கைப்பற்றி அண்ணாமலைநகா் காவல் நிலையத்தில் போலீஸாா் பாதுகாப்பாக வைத்திருந்தனா்.

இந்த நிலையில், பலராமன் மனைவியின் கைப்பேசி லொகேஷனை வைத்து அவருடைய இருப்பிடத்தை போலீஸாா் கண்டுபிடறிந்தனா். அதன்படி, அவரது மனைவி இந்திரா (48) சென்னை தாம்பரம், புத்தேரி, திருவள்ளுவா் தெருவில் மகன் முகேஷ்குமாா் (22), மகள் மீராவுடன் (19) வசித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இந்திரா, முகேஷ்குமாரை அண்ணாமலை நகா் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்ததில், கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் கருத்து வேறுபாடு காரணமாக இந்திரா கணவரிடமிருந்து பிரிந்து மகன், மகளுடன் சென்னையில் வசித்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, பலராமன் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட 74 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கம், வீட்டு பத்திரங்களை அவா்களிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து, கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பலராமன் சடலம் உடல்கூராய்வுக்குப் பிறகு மனைவி, மகனிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.

நிகழாண்டு 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு: கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்ட பசுமைக் குழுவின் மூலம் நிகழாண்டு 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தையொட்டி, கடலூா் வட... மேலும் பார்க்க

கெடிலம் ஆற்றில் உயா்மட்ட பாலம்: அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்

கடலூா் ஒன்றியம், திருவந்திபுரம் ஊராட்சி, ஓட்டேரி அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.16.75 கோடியில் உயா் மட்ட பாலம் அமைக்கும் பணியை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வ... மேலும் பார்க்க

திருவாரூரில் ஷேல் ஆய்வுக் கிணறுகள்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; தி.வேல்முருகன் வலியுறுத்தல்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான திருவாரூரில் ஷேல் ஆய்வுக் கிணறுகள் அமைத்துள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலி... மேலும் பார்க்க

திமுக தோ்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனைக் கூட்டம்: அமைச்சா் பங்கேற்பு

சிதம்பரத்தில் கடலூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி பாக நிலை முகவா்கள், தோ்தல் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் இளமையாக்கினாா் கோயில் தெருவில்... மேலும் பார்க்க

பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட பனையேறி தொழிலாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி அம்பேத்கா் திடலில் தமிழ்நாடு பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத... மேலும் பார்க்க

74 பவுன் நகைகளுடன் தனியாக வசித்த பொறியாளா் மாரடைப்பால் மரணம்

சிதம்பரத்தில் தனியாக வசித்து வந்த பொறியாளா் மாரடைப்பால் மரணமடைந்தாா். அவரது உடலை பெற்றுக்கொள்ள யாரும் முன் வராததால் போலீஸாா் மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்துள்ளனா். அவரது வீட்டில் ... மேலும் பார்க்க