செய்திகள் :

உ.பி.யில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை:3 பேர் கைது

post image

தில்லி காவல்துறை மாநிலங்களுக்கு இடையேயான சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கடத்தலை முறியடித்து, உத்தர பிரதேசம் மொரதாபாதில் ஒரு ஆயுத உற்பத்திப் பிரிவையும் கண்டுபிடித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் புதன்கிழமை மேலும் கூறியது:

தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு நடத்திய சோதனை நடவடிக்கையின்போது மாநில எல்லைகளுக்குள் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை விநியோகித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் ஃபாசில் (50), ஜமீர் (57), இல்லியாஸ் (65) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திங்கள்கிழமை நடந்த ஒரு நடவடிக்கையின் போது அவர்களிடம் இருந்து இரண்டு தானியங்கி கைத்துப்பாக்கிகள், ஐந்து கைத்துப்பாக்கிகள் மற்றும் 210 தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

மொரதாபாதில் உள்ள ஒரு ஆயுத தொழிற்சாலையையும் போலீஸார் முற்றுகையிட்டு, ஒரு லேத் இயந்திரம், அரைவை இயந்திரம், தோட்டா தயாரிக்கும் உபகரணங்கள், 257 வெற்று தோட்டாக்கள், 354 புல்லட் லீட்கள், 350 வெற்று குண்டுகள், துப்பாக்கி குண்டு, திட பித்தளை கம்பிகள் மற்றும் பிற குற்றஞ்சாட்டும் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

இந்த மூலப்பொருளை கிட்டத்தட்ட 1,000 தோட்டாக்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

முன்னதாக, தில்லியில் உள்ள காஜிப்பூர் மேம்பாலம் அருகே சட்டவிரோத ஆயுத சப்ளையரான ஃபாசில் ஆயுதங்களை வழங்குவார் என்ற தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்ததை அடுத்து, செப்டம்பர் 22 அன்று ஒரு குழு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இதையடுத்து, பொறி வைக்கப்பட்டு, ஃபாசில் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். ஒரு தேடுதல் நடவடிக்கையில் நான்கு துப்பாக்கிகள் மற்றும் 166 தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

அவரை விசாரித்ததைத் தொடர்ந்து, போலீஸார் அடுத்த நாள் ராம்பூரில் சோதனை நடத்தி ஜமீரை கைது செய்து, அவரிடமிருந்து மேலும் 20 தோட்டாக்களை மீட்டனர். ஜமீர், மொராதாபாதில் வசிக்கும் இலியாஸிடமிருந்து வெடிமருந்துகளை வாங்கியதாக தெரிவித்தார்.

அதன் பின்னர் அந்த குழு மொராதாபாதில் மற்றொரு சோதனையை நடத்தி, இலியாûஸ கைது செய்து, இரண்டு அரை தானியங்கி கைத்துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கியை மீட்டது.

விசாரணையின் போது, இலியாஸ் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இருந்து செயல்படும் ஒரு ரகசிய வெடிமருந்து தயாரிக்கும் பிரிவு இருப்பதை தெரிவித்தார். உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் அந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், தோட்டாக்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அந்த அதிகாரி.

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் கைது

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற தில்லி காவல் துறை உதவி ஆய்வாளர் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். கைதான உதவி ஆய்வாளர் கரம்வீர் சிங், துவாரகாவில்... மேலும் பார்க்க

சுபாஷ் பிளேஸ் கொள்ளை சம்பவம்: முக்கிய நபர் கைது

தில்லி சுபாஷ் பிளேஸ் பகுதியில் உள்ள நகைக் கடையில் விற்பனையாளரைக் கத்தியால் குத்தி ரூ.50 லட்சம் மதிப்புடைய நகைகளைக் கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிர... மேலும் பார்க்க

நவராத்திரி ஊர்வலத்தில் கத்திக் குத்து சம்பவம்: சிறுவன் உள்பட இருவர் கைது

மத்திய தில்லியில் நடைபெற்ற நவராத்திரி ஊர்வலத்தின்போது இரு குழுக்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது ச... மேலும் பார்க்க

காவலர் மீது துப்பாக்கிச் சூடு : சிறுவன் கைது

வடகிழக்கு தில்லியின் நந்த் நகரியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸôர் மீது துப்பாக்கியால் சுட்ட 16 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வரு... மேலும் பார்க்க

தில்லி பல்கலை.யில் கூடுதல் சுற்று: மாணவர் சேர்க்கை தொடக்கம்

தில்லி பல்கலைக்கழகம் இளங்கலைப் படிப்புகளுக்கான நேரடி கூடுதல் சுற்று (மாப்-அப்) மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது.முதல் நாளில் 73 பிஏ ஹானர்ஸ் இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர... மேலும் பார்க்க

ஓக்லா கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செப்.30-இல் திறப்பு: ஆசியாவில் மிகப் பெரியது

ஓக்லாவில் புதிதாகக் கட்டப்பட்ட 12.4 கோடி காலன் கொள்ளவு கழிவு நீரை சுத்திகரிக்கும் திறன்கொண்ட நிலையத்தின் திறப்பு விழா செப்.30-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைச் சிறப்பாக நடத்தும் பணியில் தில்லி ஜல் போர்டு த... மேலும் பார்க்க