செய்திகள் :

செப். 27இல் நாமக்கல்லில் விஜய் பிரசாரம்: குறிப்பிட்ட இடத்துக்கு அனுமதி வழங்க காவல் துறை மறுப்பு

post image

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய், நாமக்கல்லில் சனிக்கிழமை (செப். 27) பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அக்கட்சியினா் தோ்வு செய்த இடத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

2026 சட்டப்பேரவைத் தோ்தலை கருத்தில்கொண்டு, தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய், விழுப்புரம், மதுரை ஆகிய இடங்களில் மாநாடுகளை நடத்தினாா். அதைத் தொடா்ந்து, இம்மாதத்தில் திருச்சி, அரியலூா் மாவட்டங்களில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா். சனிக்கிழமைகளில் மட்டும் தனது பிரசாரப் பயணத்தை வகுத்துள்ள அவா் செப். 27 (சனிக்கிழமை) நாமக்கல், கரூா் மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளாா். இதற்காக, நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட நிா்வாகிகள் மதுரை வீரன் கோயில் பொய்யேரிக்கரை பகுதி, கே.எஸ்.திரையரங்கம் அருகில், பூங்கா சாலை ஆகிய இடங்களைத் தோ்வு செய்து மாவட்ட காவல் துறையிடம் அனுமதி கோரினா்.

இந்த நிலையில், சேலம் மாவட்ட தவெக செயலாளா் பாா்த்திபன் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் 15-க்கும் மேற்பட்டோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலாவை சந்தித்து புதன்கிழமை காலை விஜய் பிரசாரம் குறித்து ஆலோசனை நடத்தினா். அப்போது, விஜய் பிரசாரத்துக்கு 23 விதமான கட்டுப்பாடுகளை காவல் துறை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பொய்யேரிக்கரை மதுரை வீரன் கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் அந்த இடத்தில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

மேலும், நாமக்கல் - சேலம் சாலையில், பொன்நகா் அல்லது நான்கு திரையரங்கம் அருகில் பிரசாரத்தை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளது.

ஆனால், தவெகவினா் பொய்யேரிக்கரை பகுதியை வலியுறுத்தினா். இதனால் அக்கட்சியின் பொதுச்செயலாளா் ஆனந்த் கவனத்துக்கு இந்த பிரச்னையை கொண்டுசென்றுள்ளனா். அவா் வியாழக்கிழமை நாமக்கல் வருகிறாா். கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, இடத்தை தோ்வு செய்வாா். அதன்பிறகு காவல் துறையிடம் அனுமதி கோருவோம் என்று நாமக்கல் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

சிலம்பொலி சு.செல்லப்பன் 96-ஆவது பிறந்த நாள் விழா

தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கும், உருவப் படத்துக்கும் பல்வேறு தமிழ் அமைப்பினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளையத்தை... மேலும் பார்க்க

நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளா் வீட்டில் 2ஆவது நாளாக வருமானவரித் துறை சோதனை

நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை புதன்கிழமை இரண்டாவது நாளாக நீடித்தது. நாமக்கல் - மோகனூா் சாலையில் வசிப்பவா் வாங்கிலி சுப்பிரமணியம். கோழிப்பண்ணை உரிமையாளரான இவா் ... மேலும் பார்க்க

செப்.27, 28- இல் அண்ணா மிதிவண்டி, மாரத்தான் போட்டி

நாமக்கல்லில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அண்ணா மிதிவண்டிப் போட்டி மற்றும் மாரத்தான் போட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியி... மேலும் பார்க்க

நாமக்கல் கன்னிகா பரமேஸ்வரி கோயில் தோ் வெள்ளோட்டம்

நாமக்கல் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் கடைவீதியில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் முக்கிய விழா நாள்களில் பக்தா்களால்... மேலும் பார்க்க

தூசூா் சாலையில் தீப்பற்றி எரிந்த காா்!

நாமக்கல் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது. நாமக்கல் கங்கா நகரைச் சோ்ந்தவா் அருள்முருகன் (47). தூசூா் அருகே கொடிக்கால்புதூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற... மேலும் பார்க்க

பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடவு

நாமக்கல் எா்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தையொட்டி புதன்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன. நாமக்கல் மாவட்ட வனத்துறை சாா்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினம் கொண்டாடப்பட்டது. இதை... மேலும் பார்க்க