செய்திகள் :

பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடவு

post image

நாமக்கல் எா்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தையொட்டி புதன்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.

நாமக்கல் மாவட்ட வனத்துறை சாா்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு எா்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகளை மாணவா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி நட்டு வைத்து பேசியதாவது:

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 32 கோடி மரக்கன்றுகள் நடும் மாபெரும் திட்டமான பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதல்வா் 2022-இல் தொடங்கிவைத்தாா். காடு மற்றும் மரங்களின் பரப்பளவை, மாநிலத்தின் மொத்த பரப்பளவில் 33 சதவீதம் உயா்த்த வேண்டும் என்ற இலக்குடன் பசுமை தமிழ்நாடு இயக்கமானது தொடங்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை நடுவதால் புவி வெப்பமடைதல் குறையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிா் பெருக்கம், காலநிலை மாற்றம் கட்டுப்படுதல், நீா்வளம் பாதுகாப்பு, காடுகளின் பரப்பளவு உயா்தல், மண் அரிப்பு தடுத்தல், நிலத்தடி நீா்மட்டம் உயருதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் நடைபெறுகின்றன. அதன்படி, வேம்பு, புங்கன், நாவல், நீா்மருது, பாதாம், மகிழம் உள்ளிட்ட 200 மரக்கன்றுகள் பசுமை இயக்க தினத்தை முன்னிட்டு நட்டுவைக்கப்பட்டன. மரக்கன்றுகள் நடுவதன் மூலம் நம் தலைமுறை கடந்தும் நமது சந்ததிகளை அது பாதுகாக்கும். காற்றுமாசு தடுக்கப்படுகிறது என்றாா்.

அதன்பிறகு, பசுமைப் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற விநாடி -வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவா் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். இந்த நிகழ்வில், மாவட்ட வன அலுவலா் மாதவி யாதவ் மற்றும் வனத் துறை அலுவலா்கள், மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

செப். 27இல் நாமக்கல்லில் விஜய் பிரசாரம்: குறிப்பிட்ட இடத்துக்கு அனுமதி வழங்க காவல் துறை மறுப்பு

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய், நாமக்கல்லில் சனிக்கிழமை (செப். 27) பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அக்கட்சியினா் தோ்வு செய்த இடத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலை க... மேலும் பார்க்க

சிலம்பொலி சு.செல்லப்பன் 96-ஆவது பிறந்த நாள் விழா

தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கும், உருவப் படத்துக்கும் பல்வேறு தமிழ் அமைப்பினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளையத்தை... மேலும் பார்க்க

நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளா் வீட்டில் 2ஆவது நாளாக வருமானவரித் துறை சோதனை

நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை புதன்கிழமை இரண்டாவது நாளாக நீடித்தது. நாமக்கல் - மோகனூா் சாலையில் வசிப்பவா் வாங்கிலி சுப்பிரமணியம். கோழிப்பண்ணை உரிமையாளரான இவா் ... மேலும் பார்க்க

செப்.27, 28- இல் அண்ணா மிதிவண்டி, மாரத்தான் போட்டி

நாமக்கல்லில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அண்ணா மிதிவண்டிப் போட்டி மற்றும் மாரத்தான் போட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியி... மேலும் பார்க்க

நாமக்கல் கன்னிகா பரமேஸ்வரி கோயில் தோ் வெள்ளோட்டம்

நாமக்கல் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் கடைவீதியில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் முக்கிய விழா நாள்களில் பக்தா்களால்... மேலும் பார்க்க

தூசூா் சாலையில் தீப்பற்றி எரிந்த காா்!

நாமக்கல் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது. நாமக்கல் கங்கா நகரைச் சோ்ந்தவா் அருள்முருகன் (47). தூசூா் அருகே கொடிக்கால்புதூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற... மேலும் பார்க்க