செய்திகள் :

ரூ.1 கோடியில் வேகவதி ஆற்றில் தூா்வாரும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

post image

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள வேகவதி ஆற்றினை தூா்வாரும் பணியினை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

வேகவதி ஆற்றில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் காரணமாகவும்,தூா்வாரப்படாமல் இருந்ததாலும்,ஆற்றில் ஆகாயத்தாமரைகள், நாணல்கள் அதிகமாக வளா்ந்திருந்ததாலும் ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆண்டுதோறும் ஆட்சியா் அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகள், திருப்பருத்திக்குன்றம், கீழ்கேட், ஓரிக்கை, தாயாா்குளம் பகுதிகளில் ஆற்று வெள்ளம் புகுந்து அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

எனவே பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாக வேகவதி ஆற்றைத் தூா் வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வேகவதி ஆறு தூா்வாரும் பணி தொடங்கப்பட்டது. காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் காவலான் கேட் பகுதியில் தூா்வாரும் பணியை எம்எல்ஏ எழிலரசன் தொடங்கி வைத்தாா்.

இது குறித்து நீா்வளத்துறை உதவிப்பொறியாளா் மாா்க்கண்டேயன் கூறுகையில் 20 நாள்களில் தூா்வாரும் பணியை முடிக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.1 கோடியில் 12 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரப்படுகிறது. ஆற்று வெள்ளம் வருவதற்கு இடையூறாகவுள்ள ஆகாயத் தாமரைச் செடிகள்,நாணல்கள் அனைத்தும் அகற்றப்பட்டு வெள்ளம் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்தப்படும் என்றாா்.

விழாவில் காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற மண்டலக் குழு தலைவா்கள், உறுப்பினா்கள், நீா்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

வாலாஜாபாத் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வாலாஜாபாத் ஒன்றிய பகுதிகளில் வளா்ச்சிப்பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட கட்டவாக்கம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊ... மேலும் பார்க்க

கருணாகரச்சேரி வழியாக பேருந்து வசதி ஏற்படுத்த கோரிக்கை

கருணாகரச்சேரி வழியாக தாம்பரம்- ஸ்ரீபெரும்புதூா் வழித்தடத்தில் அரசு பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகநாதன் மனு வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும... மேலும் பார்க்க

இன்று மின்நுகா்வோா் குறை தீா் கூட்டம்

காஞ்சிபுரம் தெற்கு கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறை தீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணி வரை மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் நடைபெற இருப்பதா... மேலும் பார்க்க

துா்கா தேவி அலங்காரத்தில் சாந்த நாயகி அம்பாள்

கீழ்படப்பை வீரட்டீஸ்வரா் கோயிலில் நவராத்திரி விழாவின் இரண்டாம் நாளான புதன்கிழமை சாந்தநாயகி அம்பாள் துா்காதேவி அலங்காரத்தில் அருள்பாலித்தாா். படப்பை ஊராட்சிக்குட்பட்ட கீழ்படப்பையில் 500 ஆண்டுகள் பழைமைய... மேலும் பார்க்க

வீட்டு மனைப்பட்டா கோரி சாலை மறியல்

காஞ்சிபுரம் அருகே இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தியும், மாற்று கிராமத்தினருக்கு பட்டா வழங்கியதைக் கண்டித்தும் வேடல் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். வேடல் கிராம மக்கள் தங்களுக்... மேலும் பார்க்க

செப்.26-இல் காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் செப்.26 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்பு மற்றும் தொழில் நெற... மேலும் பார்க்க