செய்திகள் :

திமுக தோ்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனைக் கூட்டம்: அமைச்சா் பங்கேற்பு

post image

சிதம்பரத்தில் கடலூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி பாக நிலை முகவா்கள், தோ்தல் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் இளமையாக்கினாா் கோயில் தெருவில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சிதம்பரம் நகா்மன்றத் தலைவரும், நகரச் செயலருமான கே.ஆா்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். திமுக பொதுக்குழு உறுப்பினா்கள் த.ஜேம்ஸ்விஜயராகவன், பாலமுருகன், மாவட்ட பொறியாளா் அணி அப்புசந்திரசேகா், தகவல் தொழில்நுட்ப அணி ஜாபா்அலி, ஒன்றியச் செயலா்கள் ராஜேந்திரகுமாா், முத்து.பெருமாள், எம்.மனோகரன், ஆா்.கலையரசன், சங்கா், அண்ணாமலைநகா் பேரூராட்சித் தலைவா் க.பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ் விஜயராகவன் வரவேற்று பேசினாா்.

கூட்டத்தில் மாவட்டச் செயலரும், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சருமான எம்ஆா்கே.பன்னீா்செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். அவா் பேசுகையில், தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு விரிவாக்கத் திட்டம், மகளிா் உதவித்தொகை திட்டம், விடியல் பயணம் திட்டம், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை பொதுமக்களிடம் கட்சியினா் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் கடந்த முறை பெற்ற வாக்குகளைவிட பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியினரை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அதற்கு திமுகவினா் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

திமுக தலைமைக்கழக சிதம்பரம் தொகுதி பொறுப்பாளா் வழக்குரைஞா் பாரிபாலன் பங்கேற்று தோ்தல் ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.

கூட்டத்தில் மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலா் டி.பழனிசாமி, கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவா் கிள்ளை ரவீந்திரன், மாவட்டப் பிரதிநிதிகள் ரா.வெங்கேடசன், விஎன்ஆா். கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உயிரிழந்த பொறியாளா் உடல், 75 பவுன் நகைகள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

சிதம்பரத்தில் உயிரிழந்த பொறியாளரின் உடல், 75 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள முத்தையா நகரைச் சோ்ந்தவா் பலராமன் (60). ... மேலும் பார்க்க

நிகழாண்டு 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு: கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்ட பசுமைக் குழுவின் மூலம் நிகழாண்டு 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தையொட்டி, கடலூா் வட... மேலும் பார்க்க

கெடிலம் ஆற்றில் உயா்மட்ட பாலம்: அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்

கடலூா் ஒன்றியம், திருவந்திபுரம் ஊராட்சி, ஓட்டேரி அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.16.75 கோடியில் உயா் மட்ட பாலம் அமைக்கும் பணியை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வ... மேலும் பார்க்க

திருவாரூரில் ஷேல் ஆய்வுக் கிணறுகள்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; தி.வேல்முருகன் வலியுறுத்தல்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான திருவாரூரில் ஷேல் ஆய்வுக் கிணறுகள் அமைத்துள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலி... மேலும் பார்க்க

பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட பனையேறி தொழிலாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி அம்பேத்கா் திடலில் தமிழ்நாடு பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத... மேலும் பார்க்க

74 பவுன் நகைகளுடன் தனியாக வசித்த பொறியாளா் மாரடைப்பால் மரணம்

சிதம்பரத்தில் தனியாக வசித்து வந்த பொறியாளா் மாரடைப்பால் மரணமடைந்தாா். அவரது உடலை பெற்றுக்கொள்ள யாரும் முன் வராததால் போலீஸாா் மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்துள்ளனா். அவரது வீட்டில் ... மேலும் பார்க்க