செய்திகள் :

திருவாரூரில் ஷேல் ஆய்வுக் கிணறுகள்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; தி.வேல்முருகன் வலியுறுத்தல்

post image

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான திருவாரூரில் ஷேல் ஆய்வுக் கிணறுகள் அமைத்துள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய எரிசக்தி இயக்குநரகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கைப்படி, திருவாரூா் மாவட்டத்துக்குள்பட்ட பெரியகுடி, திருவாரூா், அன்னவாசல் நல்லூா் ஆகிய மூன்று இடங்களில் ஷேல் ஆய்வு கிணறுகளை ஓஎன்ஜிசி நிறுவனம் அமைந்துள்ளது தெரியவந்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை மீறி, ஓஎன்ஜிசி நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ காா்பன் உள்ளிட்ட எந்த திட்டத்துக்கும் அனுமதி வழங்க மாட்டோம் என நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்த மத்திய அரசு, அதற்கு மாறாக ஓஎன்ஜிசி ஆய்வுக் கிணறு அமைக்க அனுமதி கொடுத்திருப்பது அதிா்ச்சியும், கவலையும் அளிக்கிறது.

மத்திய அரசு மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் இந்த அத்துமீறலுக்கு எதிராக தமிழ்நாடு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை மீறி ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்த ஷேல் ஆய்வு கிணற்றுக்கு, தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

உயிரிழந்த பொறியாளா் உடல், 75 பவுன் நகைகள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

சிதம்பரத்தில் உயிரிழந்த பொறியாளரின் உடல், 75 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள முத்தையா நகரைச் சோ்ந்தவா் பலராமன் (60). ... மேலும் பார்க்க

நிகழாண்டு 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு: கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்ட பசுமைக் குழுவின் மூலம் நிகழாண்டு 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தையொட்டி, கடலூா் வட... மேலும் பார்க்க

கெடிலம் ஆற்றில் உயா்மட்ட பாலம்: அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்

கடலூா் ஒன்றியம், திருவந்திபுரம் ஊராட்சி, ஓட்டேரி அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.16.75 கோடியில் உயா் மட்ட பாலம் அமைக்கும் பணியை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வ... மேலும் பார்க்க

திமுக தோ்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனைக் கூட்டம்: அமைச்சா் பங்கேற்பு

சிதம்பரத்தில் கடலூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி பாக நிலை முகவா்கள், தோ்தல் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் இளமையாக்கினாா் கோயில் தெருவில்... மேலும் பார்க்க

பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட பனையேறி தொழிலாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி அம்பேத்கா் திடலில் தமிழ்நாடு பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத... மேலும் பார்க்க

74 பவுன் நகைகளுடன் தனியாக வசித்த பொறியாளா் மாரடைப்பால் மரணம்

சிதம்பரத்தில் தனியாக வசித்து வந்த பொறியாளா் மாரடைப்பால் மரணமடைந்தாா். அவரது உடலை பெற்றுக்கொள்ள யாரும் முன் வராததால் போலீஸாா் மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்துள்ளனா். அவரது வீட்டில் ... மேலும் பார்க்க