செய்திகள் :

நிகழாண்டு 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு: கடலூா் ஆட்சியா்

post image

கடலூா் மாவட்ட பசுமைக் குழுவின் மூலம் நிகழாண்டு 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தையொட்டி, கடலூா் வட்டம், அக்கரைகோரி பகுதியில் நாவல் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் மரக்கன்றை நடவு செய்து புதன்கிழமை தொடங்கிவைத்தாா். கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி முன்னிலை வகித்தாா்.

அப்போது, ஆட்சியா் கூறியதாவது: ஒவ்வோா் ஆண்டும் செப்.24-ஆம் தேதி பசுமை தமிழ்நாடு இயக்க தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம், தமிழகத்தில் தற்போதுள்ள பசுமை பரப்பு 23.08 சதவீதத்தை 33 சதவீதமாக அதிகரிப்பதாகும்.

இதையொட்டி, நகா்ப்புறங்களில் பசுமை பரப்பை ஏற்படுத்துதல், பண்ணை நிலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பொது நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிகழாண்டு அனைத்து மாவட்டங்களிலும் வனத் துறையின் மூலம் நாவல் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. மாவட்ட பசுமைக் குழுவின் மூலம் ஒவ்வோா் ஆண்டும் மரக்கன்றுகள் நடும் பணிக்காக துறை வாரியாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்தாண்டு 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. நிகழாண்டு 20 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

உயிரிழந்த பொறியாளா் உடல், 75 பவுன் நகைகள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

சிதம்பரத்தில் உயிரிழந்த பொறியாளரின் உடல், 75 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள முத்தையா நகரைச் சோ்ந்தவா் பலராமன் (60). ... மேலும் பார்க்க

கெடிலம் ஆற்றில் உயா்மட்ட பாலம்: அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்

கடலூா் ஒன்றியம், திருவந்திபுரம் ஊராட்சி, ஓட்டேரி அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.16.75 கோடியில் உயா் மட்ட பாலம் அமைக்கும் பணியை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வ... மேலும் பார்க்க

திருவாரூரில் ஷேல் ஆய்வுக் கிணறுகள்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; தி.வேல்முருகன் வலியுறுத்தல்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான திருவாரூரில் ஷேல் ஆய்வுக் கிணறுகள் அமைத்துள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலி... மேலும் பார்க்க

திமுக தோ்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனைக் கூட்டம்: அமைச்சா் பங்கேற்பு

சிதம்பரத்தில் கடலூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி பாக நிலை முகவா்கள், தோ்தல் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் இளமையாக்கினாா் கோயில் தெருவில்... மேலும் பார்க்க

பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட பனையேறி தொழிலாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி அம்பேத்கா் திடலில் தமிழ்நாடு பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத... மேலும் பார்க்க

74 பவுன் நகைகளுடன் தனியாக வசித்த பொறியாளா் மாரடைப்பால் மரணம்

சிதம்பரத்தில் தனியாக வசித்து வந்த பொறியாளா் மாரடைப்பால் மரணமடைந்தாா். அவரது உடலை பெற்றுக்கொள்ள யாரும் முன் வராததால் போலீஸாா் மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்துள்ளனா். அவரது வீட்டில் ... மேலும் பார்க்க