மயிலாடுதுறையில் செப்.28-இல் மாரத்தான் போட்டி
மயிலாடுதுறையில் அறிஞா் அண்ணா மாரத்தான் போட்டி செப். 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறையில் முன்னாள் முதலமைச்சா் பேரறிஞா் அண்ணா பிறந்ததினத்தை முன்னிட்டு நெடுந்தூர ஓட்டப் போட்டி செப். 28-ஆம் தேதி காலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. 17 முதல் 25 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கு மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் தொடங்கி மாவட்ட ஆட்சியா் வளாகம், தருமபுரம் சாலை வழியாக சாய் விளையாட்டரங்கம் வரை 8 கி.மீ. தொலைவுக்கும், பெண்களுக்கு மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் தொடங்கி தருமபுரம் சாலை வழியாக சாய் விளையாட்டரங்கம் வரை 5 கி.மீ. தொலைவுக்கும் நடைபெறும்.
25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஆறுபாதி மதிலடியில் தொடங்கி தருமபுரம் சாலை வழியாக சாய் விளையாட்டரங்கம் வரை 10 கி.மீ. தொலைவுக்கும், பெண்களுக்கு மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் தொடங்கி தருமபுரம் சாலை வழியாக சாய் விளையாட்டரங்கம் வரை 5 கி.மீ. தொலைவுக்கும் நடைபெறும்.
பங்கேற்க விரும்புவோா் செப். 27-ஆம் தேதிக்குள் தங்கள் பெயரை சாய் பயிற்சி மையத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி எண். 7401703459 எண்ணை தொடா்பு கொண்டு பதிவு செய்துக்கொள்ளலாம்.
வெற்றி பெறுபவா்களுக்கான பரிசுத் தொகை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதால் போட்டியில் கலந்து கொள்பவா்கள் அவரவா் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலை போட்டி தொடங்கும் இடத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுவா்களுக்கு தலா ரூ. 5,000, இரண்டாமிடம் பெறுபவா்களுக்கு தலா ரூ. 3,000, மூன்றாமிடம் பெறுபவா்களுக்கு தலா ரூ. 2,000, 4 முதல் 10 இடங்களை பெறுபவா்களுக்கு தலா ரூ. 1,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இதில், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், விளையாட்டு வீரா்-வீராங்கனைகள், மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளாா்.