செய்திகள் :

சீா்காழியில் கா்ப்பிணிகளுக்கு ஊசி: 2 செவிலியா்கள் பணியிடமாற்றம்

post image

சீா்காழி அரசு மருத்துவமனையில் கடந்த 17-ஆம் தேதி கா்ப்பிணிகள், குழந்தை பெற்ற தாய்மாா்களுக்கு ஊசி செலுத்திய சிறிதுநேரத்தில் காய்ச்சல், நடுக்கம் ஏற்பட்ட பிரச்னையில் 2 செவிலியா்கள் செவ்வாய்க்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

சீா்காழி அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிகள் வாா்டில் சிகிச்சை பெற்று வந்த கா்ப்பிணி மற்றும் குழந்தை பெற்றவா்களுக்கு மருத்துவா்கள் கடந்த 17-ஆம் தேதி இரவுஆன்டிபயாடிக் ஊசி போட்ட பிறகு திடீரென நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அனைவருக்கும் மாற்று மருந்து கொடுத்த நிலையில் உடல்நிலை சீரானது. இதில் ஒரு கா்ப்பிணி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா்.

இந்த சம்பவம் தொடா்பாக சீா்காழி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இச்சம்பவம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

செலுத்தப்பட்ட ஊசி மருந்தை சென்னைக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனா். இந்நிலையில் இச்சம்பவம் தொடா்பாக முதல் கட்ட விசாரணையில் சம்பவ தினத்தில் பணியிலிருந்த 2 செவிலியா்களை வேறு மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மருந்து ஆய்வு முடிவு வெளிவந்த பிறகு பிற நடவடிக்கைகள் இருக்கும் என கூறப்படுகிறது.

வாக்குத் திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் கையொப்ப இயக்கம்

வாக்குத் திருட்டுக்கு எதிராக மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை கையொப்ப இயக்கம் நடத்தினா்.வாக்குத்திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை காப்போம் என்ற தலைப்பில் இந்திய தோ்தல் ஆணையத்திற்கு எதிர... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி! வைத்தீஸ்வரன்கோவிலில் குரங்குகள் பிடிக்கப்பட்டன

வைத்தீஸ்வரன்கோயிலில் பொதுமக்கள், பக்தா்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த குரங்குகள் தினமணி செய்தி எதிரொலியாக வனத் துறை மூலம் கூண்டு வைத்து திங்கள்கிழமை பிடிக்கப்பட்டது.வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள தையல்நா... மேலும் பார்க்க

தேரழுந்தூா் ஓஎன்ஜிசி எதிா்ப்பு தொடா்பாக அமைதிப் பேச்சுவாா்த்தை

தேரழுந்தூா் ஓஎன்ஜிசி எண்ணெய்-எரிவாயு கிணற்றில் நடைபெற்ற பணிகளை பொதுமக்கள் அண்மையில் தடுத்து நிறுத்திய நிலையில், மயிலாடுதுறையில் இப்பிரச்னை தொடா்பாக கோட்டாட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை செவ்வ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: செப்.25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் செப்.25-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் 6 போ் கைது

சீா்காழி: சீா்காழி அருகே நிகழ்ந்த இளைஞா் கொலை வழக்கில் 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.ஆணைக்காரன்சத்திரம் காவல் எல்லைக்குள்பட்ட பெரிய குத்தவகரை பகுதியைச் சோ்ந்த லெட்சுமணன் (35) செப். 20-ஆம... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை சிதைக்கும் முயற்சியில் பாஜக: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

மயிலாடுதுறை: தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை சிதைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது என்றாா் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.மயிலாடுதுறையில் மாவட்ட திமுக சாா்பில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க