செய்திகள் :

ராம்லீலா, துர்கை பூஜை விழாக்களைநள்ளிரவு வரை கொண்டாட அனுமதி: முதல்வர் தகவல்

post image

நமது நிருபர்

ராம்லீலா மற்றும் துர்ûகா பூஜை போன்ற கலாசார நிகழ்வுகளை நள்ளிரவு வரை தொடர தனது அரசு அனுமதித்துள்ளதாகவும், "ராமராஜ்யம் தில்லியில் வர வேண்டும்' என்றும் அதற்காக "நாம் அனைவரும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும்' என்றும் முதல்வர் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினார்.

இது தொடர்பாக முதல்வர் ரேகா குப்தா கூறுகையில், "நமது ஹிந்து பண்டிகைகள் பிரச்னைகளை எதிர்கொள்கின்றன என்று நான் எப்போதும் கூறுவேன். எந்த ராம்லீலா இரவு 10 மணிக்கு முடிவடைகிறது? துர்கை பூஜை இரவு 10 மணிக்கு முடிவடையாது. குஜராத்தில், தாண்டியா இரவு முழுவதும் நடக்கலாம். பின்னர் தில்லி மக்கள் மட்டும் என்ன தவறு செய்தார்கள்.

அதனால்தான் இந்த முறை நாங்கள் நள்ளிரவு 12 மணி வரை அனுமதி அளித்துள்ளோம். அனைத்து ராம்லீலா, துர்கா பூஜை மற்றும் பிற கலாசார நிகழ்ச்சிகளும் இப்போது நள்ளிரவு வரை நடைபெறலாம்' என்றார்.

தில்லி அரசு ராம்லீலா, துர்கை பூஜை, தசரா மற்றும் தொடர்புடைய நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகள் மற்றும் பொது முகவரி அமைப்புகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதிக்கப்பட்ட நேரத்தை நீட்டித்தது. செப்டம்பர் 22- ஆம் தேதி முதல் அக்டோபர் 3- ஆம் தேதி வரை செல்லுபடியாகும். இந்த தளர்வுக்கு துணை நிலை ஆளுநர் வி. கே. சக்சேனா ஒப்புதல் அளித்தார்.

இந்த நீட்டிப்பு சப்தம், மாசு விதிகளை பின்பற்றுவதற்கு உள்பட்டு இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இருக்கும். குடியிருப்புப் பகுதிகளில், ஒலி அளவு 45 டெசிபல்களுக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அமைப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா இந்த நடவடிக்கைக்கு துணைநிலை ஆளுநருக்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவித்தார். இது ராம்லீலா குழுக்களின் நீண்டகால கோரிக்கை என்று அவர் கூறினார்.

ஓக்லா கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செப்.30-இல் திறப்பு: ஆசியாவில் மிகப் பெரியது

ஓக்லாவில் புதிதாகக் கட்டப்பட்ட 12.4 கோடி காலன் கொள்ளவு கழிவு நீரை சுத்திகரிக்கும் திறன்கொண்ட நிலையத்தின் திறப்பு விழா செப்.30-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைச் சிறப்பாக நடத்தும் பணியில் தில்லி ஜல் போர்டு த... மேலும் பார்க்க

சொத்துகளின் அழகை சிதைப்பதற்கு எதிராக தில்லி முதல்வர் எச்சரிக்கை

நமது நிருபர்தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மைப்படுத்தும் பணியில் பங்கேற்ற முதல்வர் ரேகா குப்தா, தலைநகரில் சொத்துகளின் அழகை சிதைப்பது பொறுத்துக் கொள்ளப்படாது என்றார்.அரசியல் தொண்டர்கள் எந்த சொ... மேலும் பார்க்க

"ஜிஎஸ்டி பச்சத் உத்சவ்' சாமானிய மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமை: ஆம் ஆத்மி விமர்சனம்

நமது நிருபர் ஜிஎஸ்டி புதிய வரி அமைப்பு முறையானது பணக்காரர்களுக்கு பயனளிக்கும் வகையிலும் சாமானிய மக்கள் மீது அதிக சுமையை சுமத்துவதாகவும் உள்ளது என்று ஆம் ஆத்மி செவ்வாய்க்கிழமை விமர்சித்தது.பிரதமர் நரேந... மேலும் பார்க்க

ஜாலி எல்.எல்.பி 3 படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்ப தடை!

ஜாலி எல்.எல்.பி 3 படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்ப தடை விதித்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அக்‌ஷய் குமார் நடிப்பில் பாலிவுட்டில் செப்டம்பர் 19 அன்று வெளியான “ஜாலி எல்.எல்.பி 3” திரைப்ப... மேலும் பார்க்க

தில்லி பள்ளி வளாகத்தில் 10 வயது மாணவி மர்ம மரணம்! 18 நாளாகியும் எப்ஐஆர்கூட இல்லை; தாய் கதறல்!

தில்லியில் பள்ளி வளாகத்தில் 10 வயது மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.மாணவி மரணமடைந்து 18 நாள்களாகியும் காவல்துறை தரப்பி... மேலும் பார்க்க

நடுவா் மன்றங்களிலும் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் தாமதம்: நீதிபதி சூா்யகாந்த்

நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதற்கு மாற்றாக கருதப்பட்ட நடுவா் மன்றங்களிலும் தற்போது பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் தாமதம் ஏற்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். உச்... மேலும் பார்க்க