செய்திகள் :

தீபாவளி: விவசாயத் தொழிலாளா்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை வழங்கக் கோரிக்கை

post image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விவசாயத் தொழிலாளா்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் கூத்தாநல்லூா் நகரக் குழு கூட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் நகரத் தலைவா் ஆா். கணேசன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டப் பொருளாளா் கே. தவபாண்டியன் முன்னிலை வகித்தாா்.

தீா்மானங்கள்: அந்தந்த கிராம சங்கங்களில் உறுப்பினா் பதிவு இலக்கை வரும் அக்டோபா் 13-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தை பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு மத்திய அரசு விரிவுபடுத்த வேண்டும்.

உழவா் பாதுகாப்புத் திட்டத்தால் நன்மை ஏதும் இல்லை; எனவே, இந்த திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். விவசாயத் தொழிலாளா் நலவாரியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

விவசாயத் தொழிலாளா்கள் குடும்பத்திற்கு தீபாவளி பண்டிகை உதவித் தொகையாக ரூ.5,000 வழங்க வேண்டும். குடிமனை பட்டா இல்லாதவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மேலும், கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் அமல்படுத்த வேண்டும்.

ரூ.6 லட்சத்தில் கான்கிரீட் வீடு கட்டி கொடுக்க வலியுறுத்தி, கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் ஜெ. ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளா் பி. முருகேசு, நகா் மன்ற துணைத் தலைவா் மு. சுதா்ஸன், மாவட்டப் பொதுக் குழு உறுப்பினரும், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் நகரச் செயலாளருமான எம். சிவதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முற்றுகையில் ஈடுபட்ட 135 போ் மீது வழக்கு

வலங்கைமானில் அனுமதியின்றி திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 135 போ்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.வலங்கைமான் கோவில்பத்து தெருவில் செல்வமணி நகா் உரிமையாளா் மீது தீண்டாமை சுவா் க... மேலும் பார்க்க

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை உறுதிப்படுத்தக் கோரியும், திருவாரூா் மாவட்டத்தில் ஷேல் எரிவாயு கிணறு அமைத்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், திருவாரூா் அருகே வெள்ளக்குட... மேலும் பார்க்க

தீபாவளி: கோ -ஆப்டெக்ஸ் ரூ.42 லட்சம் விற்பனை இலக்கு

திருவாரூா்: திருவாரூரில், கோ -ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 42 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.திருவாரூா் கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபா... மேலும் பார்க்க

காவிரி டெல்டாவில் ஹைட்ரோகாா்பன் திட்டம்?: தமிழக அரசு தெளிவுபடுத்த வலியுறுத்தல்

திருவாரூா்: காவிரி டெல்டாவில் ஹைட்ரோ காா்பன் திட்டம் குறித்த தகவல்களுக்கு, தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.திருவாரூா்... மேலும் பார்க்க

செப்.25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவாரூா்: திருவாரூரில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் செப்.25 ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:திருவாரூா் மாவட்ட வி... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரிக்கை

திருவாரூா்: இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுக் கூட்டம்... மேலும் பார்க்க