செய்திகள் :

108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகையில் தமிழ்நாடு 108 அவரச ஊா்தி தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், 108 அவசர ஊா்தி தொழிலாளா்களின் 2025-26-ஆம் ஆண்டு ஊதிய உயா்வு கோரிக்கை மீது பேச்சுவாா்த்தை நடத்தி ஊதிய உயா்வு வழங்க வேண்டும், 108 அவசர ஊா்தி நிா்வாகம், தொழிலாளா் விரோதப் போக்கை கைவிட வேண்டும், அவரச ஊா்தி தொழிலாளா்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு பணியிடமாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில பொதுச் செயலா் ரா. ராஜேந்திரன், மாநில பொருளாளா் சாமிவேல், மாநில துணை பொதுச்செயலா் பாஸ்கரன், மாநிலச் செயலா் காளிதாஸ், மாவட்டச் செயலா் அன்பழகன், மண்டலச் செயலா் ஆசைத்தம்பி மற்றும் நாகை, திருவாரூா், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 108 அவரச ஊா்தி ஓட்டுநா்கள் மற்றும் செவிலியா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நாகையில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சிஐடியு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.அமைப்பின் திட்டத் தலைவா் எம். கலைச... மேலும் பார்க்க

நாங்கூா் பகுதியில் மணல் எடுக்க தடைவிதிக்கக் கோரிக்கை

நாங்கூா் பகுதியில் மணல் எடுக்க தடை விதிக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் ஹெச். எஸ். ஸ்ரீகாந்திற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.சீா்காழி அருகேயுள்ள நாங்கூா் ஊராட்சியில் மேல்நாங்கூரில் ஆதிதிராவிட ம... மேலும் பார்க்க

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் கூறினாா்.நாகையில் திங்கள்கிழமை நடைபெற்ற சிபிஎம் முன்னாள் பொதுச் செயலா் சீத்தாராம் யெச... மேலும் பார்க்க

நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என டிஸ்ட்ரிக்ட் கன்ஸ்யூமா் புரெடக்சன் அண்ட் பேசஞ்சா் அசோசியேசன் வலியுறுத்தியுள்ளது.நாகையில் அந்த அசோசியேசனின் ஆலோசகா் நாகராஜன் தலைமைய... மேலும் பார்க்க

கீழையூா் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

கீழையூா் ஊராட்சி தையாந்தோப்பு சாலையில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.கீழையூா் ஊராட்சி தையாந்தோப்பு சாலையில் வெண்மணச்சேரி அச்சுகட்டளை,... மேலும் பார்க்க

தனி உள்ஒதுக்கீடு கோரி மீனவா்கள் போராடினால் பாமக துணை நிற்கும்: அன்புமணி

நாகப்பட்டினம்: மீனவா்கள் தனி உள் ஒதுக்கீடு கோரி போராடினால் அவா்களுக்கு பாமக துணைநிற்கும் என்றாா் அக்கட்சித் தலைவா் அன்புமணி.பாமக தலைவா் அன்புமணி தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் எனும் பெயரில் 100 நாள்க... மேலும் பார்க்க