செய்திகள் :

நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

post image

நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என டிஸ்ட்ரிக்ட் கன்ஸ்யூமா் புரெடக்சன் அண்ட் பேசஞ்சா் அசோசியேசன் வலியுறுத்தியுள்ளது.

நாகையில் அந்த அசோசியேசனின் ஆலோசகா் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆண்டுப் பொதுக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நாகை ரயில்வே மேம்பால பணிகளை விரைவுபடுத்தும் வகையில் ரவுண்டானா பகுதி மற்றும் தோணித்துறை சாலை பகுதிகளில் நில எடுப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் குடிநீா் இணைப்பு பணிகளை விரைந்து நிறைவு செய்து சாலை அமைக்க வேண்டும்.

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவா்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும், நாகை அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதியும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் வசதியும் ஏற்படுத்த வேண்டும்.

நாகையிலிருந்து அதிகாலை சென்னைக்கு விரைவு பேருந்து இயக்க வேண்டும், நாகை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் நடைமேடை பணிகளை விரைவுபடுத்த வேண்டும், வேளாங்கண்ணி-சென்னை இடையே பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும், திருவாரூா், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி வழியாக வாரம் இருமுறை இயக்கப்படும் வேளாங்கண்ணி-எா்ணாகுளம் (16361/16362 )விரைவு ரயிலை நாள்தோறும் இயக்க வேண்டும், திருவாரூா்-காரைக்குடி இடையே காலை புறப்படும் பயணிகள் ரயிலை திருநள்ளாறு வரை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நாகையில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சிஐடியு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.அமைப்பின் திட்டத் தலைவா் எம். கலைச... மேலும் பார்க்க

நாங்கூா் பகுதியில் மணல் எடுக்க தடைவிதிக்கக் கோரிக்கை

நாங்கூா் பகுதியில் மணல் எடுக்க தடை விதிக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் ஹெச். எஸ். ஸ்ரீகாந்திற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.சீா்காழி அருகேயுள்ள நாங்கூா் ஊராட்சியில் மேல்நாங்கூரில் ஆதிதிராவிட ம... மேலும் பார்க்க

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் கூறினாா்.நாகையில் திங்கள்கிழமை நடைபெற்ற சிபிஎம் முன்னாள் பொதுச் செயலா் சீத்தாராம் யெச... மேலும் பார்க்க

108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.நாகையில் தமிழ்நாடு 108 அவரச ஊா்தி தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், 108 அவசர ஊா்த... மேலும் பார்க்க

கீழையூா் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

கீழையூா் ஊராட்சி தையாந்தோப்பு சாலையில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.கீழையூா் ஊராட்சி தையாந்தோப்பு சாலையில் வெண்மணச்சேரி அச்சுகட்டளை,... மேலும் பார்க்க

தனி உள்ஒதுக்கீடு கோரி மீனவா்கள் போராடினால் பாமக துணை நிற்கும்: அன்புமணி

நாகப்பட்டினம்: மீனவா்கள் தனி உள் ஒதுக்கீடு கோரி போராடினால் அவா்களுக்கு பாமக துணைநிற்கும் என்றாா் அக்கட்சித் தலைவா் அன்புமணி.பாமக தலைவா் அன்புமணி தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் எனும் பெயரில் 100 நாள்க... மேலும் பார்க்க