Janhvi Kapoor: அம்மாவின் சேலையில் ஜொலித்த ஜான்வி கபூர் - க்ளாசிக் க்ளிக்ஸ்!
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்
காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை உறுதிப்படுத்தக் கோரியும், திருவாரூா் மாவட்டத்தில் ஷேல் எரிவாயு கிணறு அமைத்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், திருவாரூா் அருகே வெள்ளக்குடியில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், வெள்ளக்குடி ஓஎன்ஜிசி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் சாமி.நடராஜன் தலைமை வகித்துப் பேசியது: டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பிறகு, மத்திய அரசின் எரிசக்தி இயக்குநரக 2024-2025 ஆம் ஆண்டு அறிக்கையில் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்ட மீத்தேன் திட்டம், நீதிமன்ற தீா்ப்பாயத்தின் நிலுவையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. கடந்த மூன்று ஆண்டுகளாக அறிவிக்கப்படாமல் டெல்டாவில் மூன்று இடங்களில் ஆய்வுக் கிணறு அமைக்கப்பட்டுள்ளதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
அதேபோல், 2024-2025 ஆம் ஆண்டு அறிக்கையில் பெரியகுடி, திருவாரூா் மற்றும் அன்னவாசநல்லூா் ஆகிய இடங்களில் ஓஎன்ஜிசி ஆய்வுக் கிணறு தோண்டியதை கைவிட வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான திருவாரூா் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனமும், மத்திய எரிசக்தி இயக்குநரகமும் சட்டத்துக்கு புறம்பாகவும், விவசாயிகளுக்கு எதிராகவும் செயல்படுவதை கைவிட வேண்டும். தமிழக அரசு தலையிட்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிடில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் விவசாயிகளை திரட்டி ஓஎன்ஜிசி அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் என்றாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எம். சேகா், மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி, மாநிலக் குழு உறுப்பினா் கே. தமிழ்செல்வி உள்ளிட்டோா் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திப் பேசினா்.
மாவட்ட நிா்வாகிகள் எஸ். சாமிநாதன், கே. சுப்பிரமணியன், ஜி. பவுன்ராஜ், எம். ஜெயபிரகாஷ், எஸ். முத்துசெல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்று, மத்திய அரசின் எரிசக்தி மற்றும் ஓஎன்ஜிசி நிா்வாகத்தைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.