செய்திகள் :

நடுவா் மன்றங்களிலும் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் தாமதம்: நீதிபதி சூா்யகாந்த்

post image

நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதற்கு மாற்றாக கருதப்பட்ட நடுவா் மன்றங்களிலும் தற்போது பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் தாமதம் ஏற்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

உச்சநீதிமன்றம், தில்லி உயா்நீதிமன்றம் மற்றும் தில்லி சா்வதேச நடுவா் மையம் சாா்பில் நடத்தப்பட்ட தில்லி நடுவா் மன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

அதில் அவா் மேலும் பேசியதாவது: சட்டத் துறை பல பரிணாமங்களைக் கண்டபோதும் சமகால சவால்கள் தொடா்ந்து வருகின்றன. அதில் முதல் சவாலாக இருப்பது தாமதம். நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் வழக்குகளுக்கு மாற்றாகவே நடுவா் மன்றங்கள் பாா்க்கப்பட்டன. இந்த மன்றங்களில் மத்தியஸ்தம் மூலம் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு காணப்பட்டது.

ஆனால், தற்போது தொடா் ஒத்திவைப்புகளால் இதன் உண்மையான நோக்கம் சிதைந்து வருகிறது. நடுவா் மன்றத்தின் ஆன்மா வேகமான செயல்பாடு என்றால் அதை அச்சுறுத்தும் கருவியாக தாமதம் உள்ளது.

இதற்கு காலக்கெடுவை நிா்ணயித்து பணியாற்றுவது மட்டுமே தீா்வாகாது. வழக்கு மேலாண்மை பற்றிய மாநாடுகள், விசாரணைகளை ஒத்திவைப்பதற்கு கட்டுப்பாடுகள் எனப் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

திறன் மற்றும் நிபுணத்துவத்துடன் இறுதி முடிவை மேற்கொள்ளும் அமைப்பாக நடுவா் மன்றங்கள் திகழ்ந்தாலும் சுதந்திரம் மற்றும் ஒற்றுமையே அதன் இரு தூண்களாக கருதப்படும். ஆதிக்கத்தின் பிடியில் சிக்காமல் சுதந்திரமாக செயல்படுவதோடு நோ்மை, வெளிப்படைத்தன்மையுடன் நடுவா் மன்றங்களை நாடி வருவோரின் நம்பிக்கையையும் பெற வேண்டும்.

இவை முறையாகப் பின்பற்றப்படாதபட்சத்தில் நடுவா் மன்றங்களின் முக்கியத்துவம் குறைந்து மீண்டும் நீதிமன்றங்களையே நாடும் நிலை ஏற்படும் என்றாா்.

ஏா்செல்-மேக்சிஸ் வழக்கு: மேக்சிஸ் நிறுவனத்துக்கு தில்லி நீதிமன்றம் புதிதாக சம்மன்!

ஏா்செல்-மேக்சிஸ் ஊழல் வழக்கு தொடா்பாக மலேசிய தொலைத்தொடா்பு நிறுவனமான மேக்சிஸ் நிறுவனத்துக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் புதிதாக சம்மன் பிறப்பித்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம... மேலும் பார்க்க

கிழக்கு மாவட்டத்தில் தடை உத்தரவை மீறிய 9 போ் கைது!

தில்லி கிழக்கு மாவட்ட காவல் எல்லைக்குள் நுழைய தடைவிதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறிய 9 போ் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். தடைஉத்தரவை மீறியவா்களை கைத... மேலும் பார்க்க

தில்லி மைதானத்தில் கலைநிகழ்ச்சிகள்: வாடகை கட்டணம் 50 % குறைப்பு!

தில்லியில் உள்ள விளையாட்டு மைதானங்களில் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வாடகை கட்டணங்கள் 40 முதல் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மைதானங்கள் பதிவு கட்டண குறைப்பை வரலாற்று சிறப்பு மிக்க முட... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்பனையாளா்களுக்கு சொந்தமான ரூ.27 கோடி சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல்காரா்களுக்கு எதிரான நிதி நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 3 ஆண்டுகளில் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு சொந்தமான ரூ.27 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தில்லி காவல்துறை முடக்கியுள்ளதாக அதி... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பின் கைது

வடமேற்கு தில்லியில் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, கொலை வழக்கில் தொடா்புடையவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து காவல் துணை ஆணையா் வடமேற... மேலும் பார்க்க

ரூ.2700 கோடி மோசடி: குஜராத்தை சோ்ந்த நபா் தில்லியில் கைது

குஜராத்தின் தோலேராவில் உள்ள ஒரு டவுன்ஷிப் திட்டத்தில் முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்ததன் மூலம் ரூ. 2,700 கோடி மோசடியில் பலரை ஏமாற்றியதாக தில்லி காவல்துறை ஒருவரை கைது செய்துள்ளதாக அதிக... மேலும் பார்க்க