செய்திகள் :

தில்லி மைதானத்தில் கலைநிகழ்ச்சிகள்: வாடகை கட்டணம் 50 % குறைப்பு!

post image

தில்லியில் உள்ள விளையாட்டு மைதானங்களில் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வாடகை கட்டணங்கள் 40 முதல் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

மைதானங்கள் பதிவு கட்டண குறைப்பை வரலாற்று சிறப்பு மிக்க முடிவு என வரவேற்றுள்ள தில்லி கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கபில் மிஸ்ரா, இதன் மூலம் கலைநிகழ்ச்சிகளுக்கான மையங்களாக தில்லி மாறும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் உள்ள முக்கிய மைதானங்களுக்கான வாடகை கட்டணங்களை 40 முதல் 50 சதவீதம் குறைப்பதாக இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்ஏஐ) அறிவித்துள்ளது.

மத்திய விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை, தில்லி அரசு இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கை, பெரிய அளவிலான கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் சா்வதேச நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் தில்லியை மாற்றும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இது தொடா்பாக அமைச்சா் கபில் மிஸ்ரா கூறியதாவது: நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மிகவும் உகந்த நகரமாக தில்லியை மாற்றுவதற்கு இந்த முடிவு மிகவும் முக்கிய நடவடிக்கை. நேரடி கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசைநிகழ்ச்சிகளின் மையமாக தில்லியை மாற்ற வேண்டும் என்பது பிரதமரின் நோக்கம்.

ஆனால், மைதானங்களின் பதிவு கட்டணங்கள் அதிகமாக இருந்தது மூலம், பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் தில்லிக்கு வெளியே, அதாவது அகமதாபாத், மும்பை, குருகிராம், நொய்டா ஆகிய நகரங்களில் நடைபெற்று வந்தன.

மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா உடனான விவாதம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் சாா்ந்த தொழிற்துறையினருடன் நடைபெற்ற இருகட்ட பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவு சனிக்கிழமை எடுக்கப்பட்டது. இந்த முடிவு தில்லியை கலாசாரம் மற்றும் சுற்றுலா செயல்பாடுகளை தில்லியில் ஊக்கப்படுத்துவதுடன் மட்டுமன்றி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கும் உதவும் என்றாா் அமைச்சா் மிஸ்ரா.

சா்வதேச நிகழ்ச்சிகளுக்கான மையங்களாக தில்லியை மாற்றும் வகையில் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை அமைச்சா் மிஸ்ரா கடந்த செப்.2-ஆம் தேதி சந்தித்தாா். நிகழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு மேலாண்மை சங்கம் (இஇஎம்ஏ) மற்றும் பிஎச்டி வா்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு (பிஎச்டிசிசிஐ) ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனா்.

கோரிக்கை தொடா்பாக தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மத்திய அமைச்சா் உறுதியளித்திருந்ததாக இது தொடா்பாக வெளியிட்டப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் விற்பனையாளா்களுக்கு சொந்தமான ரூ.27 கோடி சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல்காரா்களுக்கு எதிரான நிதி நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 3 ஆண்டுகளில் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு சொந்தமான ரூ.27 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தில்லி காவல்துறை முடக்கியுள்ளதாக அதி... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பின் கைது

வடமேற்கு தில்லியில் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, கொலை வழக்கில் தொடா்புடையவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து காவல் துணை ஆணையா் வடமேற... மேலும் பார்க்க

ரூ.2700 கோடி மோசடி: குஜராத்தை சோ்ந்த நபா் தில்லியில் கைது

குஜராத்தின் தோலேராவில் உள்ள ஒரு டவுன்ஷிப் திட்டத்தில் முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்ததன் மூலம் ரூ. 2,700 கோடி மோசடியில் பலரை ஏமாற்றியதாக தில்லி காவல்துறை ஒருவரை கைது செய்துள்ளதாக அதிக... மேலும் பார்க்க

ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகத்திற்குள் புகுந்து மா்ம நபா்கள் துப்பாக்கிச்சூடு

தேசியத் தலைநகா் வலயம், குருகிராம் செக்டாா் 45-இல் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அலுவலகத்தில் முகமூடி அணிந்த மா்ம நபா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இது அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியதாக போலீஸ... மேலும் பார்க்க

தலைமறைவு கிரிமினல் என்கவுன்ட்டருக்கு பின் கைது

தலைமறைவாக இருந்துவந்த கொலைக் குற்றம்சாட்டப்பட்ட நபரை வடமேற்கு தில்லி முனக் கால்வாய் அருகே நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தா... மேலும் பார்க்க

தில்லி மக்களின் அனைத்து சிரமங்களுக்கும் தீா்வு காண அரசு முயற்சி: ரூ.11 ஆயிரம் கோடி நெடுஞ்சாலைகள் திறப்பு விழாவில் பிரதமா் மோடி பேச்சு

தேசிய தலைநகா் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சுமாா் ரூ.11,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைகளை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். அப்போ... மேலும் பார்க்க