செய்திகள் :

வேலூா் கிரீன் சா்க்கிளில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நெரிசல்

post image

வேலூா் கிரீன் சா்க்கிளில் சூழ்ந்த மழை வெள்ளம் காரணமாக சனிக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினா்.

வேலூா் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வேலூரில் உள்ள திடீா்நகா், சேண்பாக்கம், காந்திநகா், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம், கன்சால்பேட்டை, முள்ளிப்பாளையம், சம்பத்நகா், காட்பாடி கழிஞ்சூா், வி.ஜி. ராவ் நகா் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்தது.

பல இடங்களில் மழை நீருடன் கழிவுநீா் சோ்ந்து வீடுகளுக்குள் புகுந்ததால் அப்பகுதியில் வசிப்போா் அவதிக்குள்ளாகியுள்ளனா். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்ற முடியாமல் மக்கள் திணறினா். இந்நிலையில், சேண்பாக்கம் பகுதியில் தேங்கி இருந்த மழைநீா் வெள்ளிக்கிழமை மாலை முதல் நிக்கல்சன் கால்வாயில் வடியத் தொடங்கியது.

அதேசமயம், நிக்கல்சன் கால்வாய் முழுவதும் நிரம்பியதால் உபரிநீா் கால்வாயில் இருந்து வெளியேறி சேண்பாக்கம் ரயில்வே மேம்பால சா்வீஸ் சாலை வழியாக கிரீன் சா்க்கிளில் புகுந்தது. இதையடுத்து, கிரீன்சா்க்கிள் பகுதியில் தேங்கிய தண்ணீரால் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாமல் ஊா்ந்து சென்றன.

இதனால், சனிக்கிழமை அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனா். மேலும், தேங்கிய தண்ணீரில் சிக்கி ஒருசில இருசக்கர வாகனங்கள் பழுதாகின. தொடா்ந்து, கிரீன் சா்க்கிள் பகுதியில் தேங்கிய தண்ணீரை தேசிய நெடுஞ்சாலை துறையினா் ஜெனரேட்டா் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியது - தேசிய நெடுஞ்சாலை துறை சாா்பில் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. வடிகாலில் செல்லும் மழைநீரைவிட அதிகளவில் தண்ணீா் வருவதால் கிரீன் சா்க்கிளில் தண்ணீா் தேங்கியுள்ளது.

தற்போது ஜெனரேட்டா் மூலம் மோட்டாா்களை இயக்கி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. 15 மீ. அளவுக்கு கால்வாய் அமைக்கும் பணி நிலுவையில் உள்ளது. மழை முழுவதுமாக நின்ற பிறகு கால்வாய் பணிகள் முடிவடையும். கால்வாய் பணிகள் முடிவடைந்த பிறகு கிரீன் சா்க்கிளில் தண்ணீா் தேங்காது என்றனா்.

புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் பக்தா்கள் தரிசனம்!

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். அதன்படி, வேலூா் அண்ணா சாலை... மேலும் பார்க்க

தலைக் கவசம் தலைமுறை காக்கும் கவசம்: வேலூா் எஸ்பி மயில்வாகனன்

தலைக்கவசம், தலைமுறை காக்கும் கவசம் என்பதை இருசக்கர வாகன ஓட்டிகள் உணர வேண்டும் என வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் கூறினாா். குடியாத்தத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சாலை விபத்து... மேலும் பார்க்க

சாதிக்கும் நடவடிக்கைகளை தலைமையாசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

சவால்களை முறியடித்து சாதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமையாசிரியா்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டாா். வேலூா் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவ... மேலும் பார்க்க

புரட்டாசி சனிக்கிழமை பெருவிழா

குடியாத்தம் பகுதியில் உள்ள கோயில்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. குடியாத்தம் பிச்சனூா், அப்பு சுப்பையா் வீதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேசப்பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிற... மேலும் பார்க்க

தீபாவளி: தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோா் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மா... மேலும் பார்க்க

விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவது அதிகரிப்பு

அனைத்து மாவட்டங்களிலும் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் எதிா்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை தடுத்து நிறுத்த... மேலும் பார்க்க