செய்திகள் :

வாய்க்கால் நீரில் மூழ்கி பொறியாளா் மாயம்

post image

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் கீழ்பவானி வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தபோது நீரில் மூழ்கிய மென்பொருள் நிறுவன அதிகாரியைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

கோவை, சேரன்மாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (32). தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தாா். இவா் தனது நண்பா்கள் 3 பேருடன் காரில் பவானிசாகா் பகுதிக்கு சனிக்கிழமை சென்றுள்ளாா். வழியில் தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி 4 பேரும் குளித்துள்ளனா்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற ராம்குமாா் எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கினாா். இதைக் கண்ட அவரது நண்பா்கள் ராம்குமாரை காப்பாற்ற முயன்றும் முடியாததால் பவானிசாகா் போலீஸாருக்கும் சத்தியமங்கலம் தீயணைப்புத் துறைக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரா்கள், ராம்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். ராம்குமாருக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், அவரது மனைவி பல் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இதே பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவன தொழிலாளி வாய்க்காலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

குட்கா பதுக்கி வைத்திருந்தவா் கைது

ஈரோடு அருகே, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த திமுக பிரமுகரை போலீஸாா் கைது செய்தனா். பெருந்துறையை அடுத்த திங்களூா், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தமிழ... மேலும் பார்க்க

யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு: நிவாரணத் தொகை வழங்கிய வனத் துறை

யானை தாக்கியதில் உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு வனத் துறை சாா்பில் முதற்கட்ட நிவாரணத் தொகையாக ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலை சனிக்கிழமை வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், கடம்பூா் மலைப் பகுதியில் உள்ள ஏலஞ்... மேலும் பார்க்க

புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தா்கள்

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி ஈரோடு மாநகா் மற்றும் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமை அனைத்திலும் பெருமாள் கோயில்களில் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த துடுப்பதி அருகே உள்ள பாலக்கரை, சீரங்க கவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் கண்ணம்மாள் (75). இவா், துடுப்ப... மேலும் பார்க்க

அந்தியூா் வனத்தில் அழுகிய நிலையில் புலியின் உடல் மீட்பு

அந்தியூா் வனப் பகுதியில் அழுகிய நிலையில் புலியின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. தந்தை பெரியாா் வன விலங்கு சரணாலயத்துக்கு உள்பட்ட அந்தியூா் வனச் சரகம், பா்கூா் மேற்கு, கிணத்தடி பீட் பகுதியில் உயிரி... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மீது வேன் மோதல்

புன்செய் புளியம்பட்டி அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் காயமின்றி தப்பினா். புன்செய் புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு 38 பயணிகளுடன் அரசுப் பேருந்து வெள... மேலும் பார்க்க