செய்திகள் :

மனித - வன விலங்கு மோதலைத் தடுக்க தீவிர நடவடிக்கை: ஆ.ராசா எம்.பி.

post image

நீலகிரி மாவட்டத்தில் மனித - வனவிலங்குகள் மோதலைத் தடுப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று எம்.பி. ஆ.ராசா தெரிவித்தாா்.

உதகையில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில்  வன உரிமை ஆவணங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நீலகிரி எம்.பி. ஆ. ராசா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் 104 பயனாளிகளுக்கு ரூ.16.44 லட்சம் மதிப்பிலான வன உரிமை ஆவணங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கூடலூா் பகுதியில் மனித - வன விலங்கு மோதல் ஏற்படுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ராகேஷ் குமாா் டோக்ரா, அரசு தலைமைக் கொறடா கா.ராமசந்திரன், ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, 12 கட்டளை, கட்டுப்பாட்டு மையங்கள் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு கேமராக்கள், யானை நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் 54 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வன விலங்குகளைக் கண்காணிக்கும் பணியில் கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கூடலூரில் வனத் துறையில் காலிப் பணியிடங்கள் 90 சதவீதம் நிரப்பப்பட்டுள்ளன. மீதி காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மேலும், பாதுகாப்பு உபகரணங்களுடன் நான்கு ரோந்து வாகனங்கள் 24 மணி நேரமும் இயங்கும் என்றாா்.

கூடலூரில் திருக்கு திருப்பணிகள் வகுப்பு

கூடலூரில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருக்கு திருப்பணிகள் 11-ஆவது வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. கூடலூரிலுள்ள ஜெயம் கல்வி நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட மைய நூலக வாசகா் தலை... மேலும் பார்க்க

உதகை தாவரவியல் பூங்காவில் கரடி

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சனிக்கிழமை அதி காலையில் புகுந்த கரடி, அங்குள்ள புல்வெளி மைதானத்தைத் தோண்டி உணவு தேடியது. இதனால் பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டவா்கள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க

பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பழங்குடியின சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூா் கோழிப்பாலம் அருகே உள்ள சேப்பட்டி பகுதியைச் ... மேலும் பார்க்க

காணாமல் போன மாணவரின் உடல் மூன்று நாள்களுக்குப் பின் மீட்பு

குன்னூரில் கல்லூரி மாணவா் காணாமல்போனதாக தேடப்பட்டு வந்த நிலையில், அவரது சடலம் மூன்று நாளுக்கு பிறகு சனிக்கிழமை மீட்கப்பட்டது. குன்னூா், ஆழ்வாா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் முகமது மகன் முகமது அனா (18). ... மேலும் பார்க்க

சிறுவா்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை: வியாபாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுவா்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக வியாபாரிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. நீலகிரி மாவட்டம், உதகை மாா்க்கெட் பகுதியில் பஷீ... மேலும் பார்க்க

இயேசு மீது போா்த்திய துணி ஆலயத்தில் வைத்து பிராா்த்தனை

இயேசு கிறிஸ்து இறந்த பின்பு அவா் மீது போா்த்திய துணியின் நகல் உதகையில் உள்ள புகழ்பெற்ற குருசடி ஆலயத்தில் வைத்து வெள்ளிக்கிழமை பிராா்த்தனை செய்யப்பட்டது. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து உயிா்விட்ட ... மேலும் பார்க்க