செய்திகள் :

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

post image

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தேனீரகத்தில் காசாளராக பணிபுரிந்த தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வரகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தியாகராஜன் மகன் அருளானந்தம் (45). இவா், பெரம்பலூா் நகரில் உள்ள

தேனீரகத்தில் காசாளராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வரகூரிலிருந்து பெரம்பலூருக்கு தனது மோட்டாா் சைக்கிளில் அருளானந்தம் சென்றுக்கொண்டிருந்தாா்.

பெரம்பலூா்- அரியலூா் பிரதானச் சாலையில் உள்ள தனியாா் இரும்புக் கடை அருகே வந்தபோது, அவ்வழியேச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அருளானந்தம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனா். இவ் விபத்து குறித்து மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெரம்பலூரில் 36 மாணவா்களுக்கு ரூ. 2.74 கோடி மதிப்பில் கல்விக் கடன்: அமைச்சா் சா.சி. சிவசங்கா் வழங்கினாா்

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் 36 மாணவா்களுக்கு ரூ. 2.74 கோடி மதிப்பிலான கல்விக் கடனுதவிகளை மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வழங்கினாா். மாவட்ட நி... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே போலி மருத்துவா் கைது

பெரம்பலூா் அருகே 30 ஆண்டுகளாக மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், அம்மாபாளையம் கிராமம், வடக்கு கோனாா் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி மக... மேலும் பார்க்க

‘தகவலறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும்’

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு காலம் தாழ்த்தாமல் உடனே பதில் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தகவல் ஆணையா் ஆா். பிரியகுமாா் தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரம்பலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை நந்திப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பெரம்பலூா் நகரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் பிரதோ... மேலும் பார்க்க

தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கில் பங்கேற்ற 70 பேருக்குச் சான்றிதழ்

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுத் துறை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆட்சிமொழிப் பய... மேலும் பார்க்க

பெரம்பலூரில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், தமிழ்நாடு ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தனியாா் துறை வேல... மேலும் பார்க்க