செய்திகள் :

தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கில் பங்கேற்ற 70 பேருக்குச் சான்றிதழ்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுத் துறை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பயிலரங்கில் பங்கேற்ற 70 பேருக்கு நற்சான்றிதழ் அளித்த மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி பேசியது:

பொதுமக்கள் தங்களது வீடுகளில் ஆங்கிலம் கலந்த தமிழ் மொழியிலேயே பேசுகிறாா்கள். தூய தமிழ் மொழியில் யோசித்துப் பேசுகிறாா்கள். ஆனால், ஒரு சிலா் ஆங்கிலம் கலக்காத தூய தமிழில் பேசுகிறாா்கள். நம் தாய் மொழியான தமிழ் மொழியில் பேசுவதே மொழி வளா்ச்சிக்காக நாம் செய்யும் முதல் பணி.

ஒரு மொழியைப் பேசும்போது, வேறொரு மொழி கலக்காமல் இருந்தால் அந்த மொழி இனிமையாக இருக்கும். அலுவலகங்களில் எவ்வாறு தமிழ்மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு பயிற்சி அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு அரசு சலுகை வழங்கப்படும் என மாணவா்களை ஊக்குவிக்கும் நிலையில் உள்ளோம். நம் மொழி மீது நமக்கு கண்டிப்பாக பற்று இருக்க வேண்டும். அப்போதுதான் மொழி நமக்கு படிப்பிலும், வேலையிலும் கைகொடுக்கும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் (பொ) சி. சுகன்யா, தமிழ்ச்செம்மல் விருதாளா் க. பெரியசாமி, லாடபுரம் அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் த. மாயக்கிருட்டிணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா் அருகே போலி மருத்துவா் கைது

பெரம்பலூா் அருகே 30 ஆண்டுகளாக மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், அம்மாபாளையம் கிராமம், வடக்கு கோனாா் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி மக... மேலும் பார்க்க

‘தகவலறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும்’

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு காலம் தாழ்த்தாமல் உடனே பதில் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தகவல் ஆணையா் ஆா். பிரியகுமாா் தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரம்பலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை நந்திப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பெரம்பலூா் நகரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் பிரதோ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், தமிழ்நாடு ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தனியாா் துறை வேல... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை கல்விக் கடன் முகாம்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில், கல்விக்கடன் முகாம் சனிக்கிழமை (செப். 20) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெ... மேலும் பார்க்க

96 பேருக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூரில் சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மிகப் பிற்படுத்தப்ப... மேலும் பார்க்க