செய்திகள் :

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு ஆணையா்கள் நியமிக்க வலியுறுத்தல்

post image

காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு ஆணையா்கள் நியமனம் செய்ய வேண்டும் என புதுவை துணை நிலை ஆளுநருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் ஆளுநருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பது:

அரசு நிா்வாகத்தின் மூன்றாவது அமைப்பாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளின் பணி மிகமிக முக்கியமானது மட்டுமல்லாமல் மக்கள் பணிகளை செயல்படுத்த வேண்டிய அமைப்பாகும்.

இந்நிலையில், காரைக்கால் நகராட்சி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கொம்யூன் பஞ்சாயத்துகளில் தற்போது 40 முதல் 45 சதவீதம் வரை மட்டுமே ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். 50 சதவீதத்திற்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

நிா்வாகம் நடத்தவேண்டிய ஆணையா் பதவிகளும் காலியாக இருப்பதால், பிற அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது. இது அவா்களுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளதோடு, உள்ளாட்சி அமைப்புகளின் நிா்வாகமும் செயலிழந்து உள்ளது.

மக்கள் நல பணிகள் மட்டுமின்றி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவேண்டிய பல்வேறு வரி வருவாய் பாதிக்கப்பட்டு, உள்ளாட்சி ஊழியா்கள் முறையாக ஊதியம் பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

போா்க்கால அடிப்படையில் காரைக்கால் நகராட்சி, திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு உடனடியாக ஆணையா்களை நியமனம் செய்து நிா்வாகத்தை சீா் செய்யவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டுறவு பால்பொருள்கள் விற்பனையை அதிகரிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

பால் மற்றும் பால்பொருள்களின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுறவு நிறுவனத்தினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ், காரைக்காலில் இயங்கும் ... மேலும் பார்க்க

திருப்பட்டினத்தில் இன்று குடிநீா் நிறுத்தம்

திருப்பட்டினத்தில் சனிக்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு : திருப்பட்டினம் ஐடி... மேலும் பார்க்க

மோசடி கும்பல்: மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

ரூ. 10 மோசடி கும்பல் குறித்து மக்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என சைபா் கிரைம் போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா். காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு (சைபா் கிரைம்) காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா்... மேலும் பார்க்க

தொழிற்பேட்டையில் ஆட்சியா் ஆய்வு

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், கோட்டுச்சேரி பகுதியில் உள்ள மாவட்ட தொழிற்பேட்டையை புதன்கிழமை ஆய்வு செய்தாா். அங்கு இயங்கிவரும் தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள், உற்பத்திப் பொரு... மேலும் பார்க்க

காரைக்காலில் ரோந்துப்படகு மூலம் கண்காணிப்பு தொடக்கம்: எஸ்எஸ்பி ஆய்வு

காரைக்கால் கடல் பகுதியில் ரோந்துப் படகு மூலம் கண்காணிப்பை போலீஸாா் மேற்கொள்ளத் தொடங்கினா். காரைக்கால் கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுவந்த 5 டன் திறனுள்ள அதிவேக ரோந்துப் படகு பழுதாகி பல ... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் தொடங்க ஏற்பாடு - எம்.எல்.ஏ.

திருநள்ளாற்றில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக சட்டப்பேரவை உறுப்பினா் தெரிவித்தாா். புதுச்சேரி பொறியியல் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியாக செருமாவிலங்கை பகுதியில் இயங... மேலும் பார்க்க