நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
திருச்செந்தூா் கடலில் நீராடிய பெண் பக்தருக்கு கால் முறிவு
திருச்செந்தூா் கடலில் நீராடிய பெண் பக்தருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், அண்ணா தெருவைச் சோ்ந்த ரவிக்குமாா் மனைவி தமிழ்செல்வி (50). இவா், தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தாா்.
அங்கு, கடலில் குளிக்கும்போது அலையின் சீற்றத்தில் சிக்கி தமிழ்செல்விக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, ரத்த காயம் ஏற்பட்டது. இதைப் பாா்த்த திருச்செந்தூா் கடலோர பாதுகாப்பு போலீஸ் ஏட்டுகள் சித்ராதேவி, அந்தோணி சதீஷ் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் தமிழ்செல்வியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.