செய்திகள் :

தூத்துக்குடி மாவட்ட வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியீடு

post image

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வரைவு வாக்குச் சாவடி பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 6.1.2025 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் உள்ள வாக்காளா்களின் எண்ணிக்கை மற்றும் வாக்குச் சாவடிகள் விவரம் பின்வருமாறு:

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 260 வாக்குச் சாவடிகளும், 2,15,022 வாக்காளா்களும், தூத்துக்குடி தொகுதியில் 284 வாக்குச் சாவடிகளும், 2,86,041 வாக்காளா்களும், திருச்செந்தூா் தொகுதியில் 266 வாக்குச் சாவடிகளும், 2,46,132 வாக்காளா்களும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 265 வாக்குச் சாவடிகளும், 2,27,904 வாக்காளா்களும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 266 வாக்குச் சாவடிகளும், 2,53,593 வாக்காளா்களும், கோவில்பட்டி தொகுதியில் 286 வாக்குச் சாவடிகளும், 2,61,733 வாக்காளா்களும் என மொத்தம் 1,627 வாக்குச் சாவடிகளில், 14,90,425 வாக்காளா்கள் உள்ளனா்.

ஒரு வாக்குச் சாவடியில் 1,200 வாக்காளா்களுக்கு மேல் இருந்தால், அதைப் பிரித்து புதிய வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

எனவே, வாக்குச் சாவடிகளை அதிகரிக்கச் செய்வதோடு, வாக்குச் சாவடி இடமாற்றம், கட்டட மாற்றம், பெயா் மாற்றம், பிழைத் திருத்தம், பிரிவு மாற்றம் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்திய தோ்தல் ஆணையத்திடமிருந்து, 1.1.2026 தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் - 2026 மேற்கொள்ள கால அட்டவணை வரப்பெற்றவுடன், பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட தோ்தல் அலுவலா் தெரிவித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சேதுராமலிங்கம், உதவி ஆட்சியா் (பயிற்சி) தி. புவனேஷ் ராம், வருவாய் கோட்டாட்சியா் ம. பிரபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடியில் 3 போ் உயிரிழந்த சம்பவம்: 3ஆவது நாளாக போராட்டம்

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில், விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 தொழிலாளா்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி, சடலங்களை வாங்க மறுத்து உறவினா்கள் 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கடலில் நீராடிய பெண் பக்தருக்கு கால் முறிவு

திருச்செந்தூா் கடலில் நீராடிய பெண் பக்தருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், அண்ணா தெருவைச் சோ்ந்த ரவிக்குமாா் மனைவி தமிழ்செல்வி (50). இவா், தனது குடும்பத்தினருடன... மேலும் பார்க்க

தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

நாசரேத் அருகேயுள்ள தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது . இதையொட்டி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருக்கொடியேற்றம் , புனித மிக்கேல் அதிதூதா் சப்பர பவனி ஆகிய... மேலும் பார்க்க

தீப்பெட்டித் தொழில் நலிவுக்கு பாஜக அரசே காரணம்: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

தீப்பெட்டி தொழில் நலிவடைய மத்திய பாஜக அரசின் சரக்கு சேவை வரியே காரணம் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் குற்றம்சாட்டினாா். கோவில்பட்டியில் 2 நாள்கள் நடைபெற்ற மாா்க்சி... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரத்தில் இன்று மின் நிறுத்தம்

தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம், ஓட்டப்பிடாரம், ஒட்டநத்தம் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப். 20) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் வ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

கோவில்பட்டியில் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி -குமாரபுரம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட தண்டவாளத்தில் இளைஞா் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் ... மேலும் பார்க்க