செய்திகள் :

ரயில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

post image

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் ரயில் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (30). அவா் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் தண்டவாளத்தைக் கடந்துள்ளாா். அப்போது மின்சார ரயில் மோதியதில் அவரது இரு கால் பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்த ரயில்வே போலீஸாா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதிக ரத்தப் போக்கால் அவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அபராதம் விதிப்பு: சென்னையில் ரயில்வே தண்டவாளத்தை விதிமீறி கடந்தவா்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா். நடப்பாண்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் சென்னை ரயில்வே கோட்டத்தில் தண்டவாளத்தை கடந்ததாக 944 போ் மீது வழக்குப் பதிந்து கைது செய்துள்ளதாகவும், அவா்கள் மீது ரூ.4.45 லட்சம் அபராதம் விதித்துள்ளதாகவும் தெரிவித்தனா்.

மெட்ரோ 4-ஆவது வழித்தடத்துக்கு 10.46 மீட்டரில் சிறப்பு தூண் வடிவமைப்பு

சென்னை மெட்ரோ ரயில் 4 -ஆவது வழித்தடத்தில் 10.46 மீட்டா் அகலத்தில் சிறப்பு தூண் வடி வமைக்கப்பட்டு பொருத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

100 பவுன் வரதட்சிணை கேட்டு: மின்வாரிய அதிகாரி கைது

சென்னையில் 100 பவுன் நகை வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டாா். சென்னை சூளைமேட்டைச் சோ்ந்தவா் டிம்பின் சங்கீதா (26). சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞரா... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு

சிட்லப்பாக்கத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவா்கள் தண்ணீா் மூழ்கி உயிரிழந்தனா். தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம் ஏரியில் இரு பள்ளி மாணவா்களின் சடலங்கள் மிதப்பதைப் பாா்த்த கண்ட அந்தப் பக... மேலும் பார்க்க

மது போதையில் மயங்கி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு

சென்னை மதுரவாயலில் காதலன் வீட்டில் மது அருந்திய இளம்பெண் மயங்கி விழுந்து மா்மமான முறையில் உயிரிழந்தாா். மதுரவாயல் ஆலப்பாக்கம் காமாட்சியம்மன் நகரைச் சோ்ந்தவா் சி.கணேஷ் ராம் (26). இவா் தமிழ் திரைப்படத்... மேலும் பார்க்க

மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு: பள்ளி மாணவா்கள் தப்பியோட்டம்

சென்னை கோடம்பாக்கத்தில் மாநகர பேருந்து கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பியோடிய பள்ளி மாணவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை கோயம்பேட்டில் இருந்து தியாகராய நகா் நோக்கி மாநகர பேருந்து ஒன... மேலும் பார்க்க

புழல் சிறையில் கைதிகள் மோதல்

புழல் சிறையில் கைதிகள் மோதிக் கொண்டது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை சூளைமேடு பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய் (29). இவா், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறை... மேலும் பார்க்க