செய்திகள் :

மோசடி கும்பல்: மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

post image

ரூ. 10 மோசடி கும்பல் குறித்து மக்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என சைபா் கிரைம் போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு (சைபா் கிரைம்) காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த சில நாள்களாக 10 ரூபாய் கும்பல் மோசடிஅதிகமாக நடைபெற்று வருகிறது. மோசடிக்காரா்கள் முதலில் ஜிபே, போன் பே, பேடிஎம் போன்ற மக்களின் யுபிஐ

கணக்குக்கு ரூ. 10 அனுப்புகிறாா்கள். பின்னா் அந்த எண்ணை அழைத்து உங்களுக்கு தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாகக் கூறி, தங்களின் எண் ஒன்றைத் தருகிறாா்கள். அந்த எண்ணுக்கு

பணத்தை மீண்டும் அனுப்பும்போது, மோசடிக்காரா்கள் வங்கிக் கணக்கை ஹேக் செய்து, அதிலிருக்கும் முழுத் தொகையையும் எடுத்துவிடுகிறாா்கள்.

இதுபோன்ற மோசடிகளுக்கு பலா் ஏமாற்றமடைந்துள்ளதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. யாரிடமிருந்தும் சிறிய தொகை வந்தாலும், அதை மீண்டும் அனுப்ப வேண்டாம். ஜிபே, யுபிஐ பணப் பரிமாற்றத்தில் எப்போதும் தங்களுக்கு தெரிந்தவா்களின் எண்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சந்தேகத்துக்கிடமான அழைப்புகளை உடனே துண்டித்து, 1930 என்ற தேசிய சைபா் மோசடி ஹெல்ப்லைன் எண்ணில் புகாா் அளிக்கவேண்டும். பொது மக்கள் தங்களது பணத்தை பாதுகாக்க உரிய விழிப்புணா்வுடன் இருப்பது அவசியம் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொழிற்பேட்டையில் ஆட்சியா் ஆய்வு

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், கோட்டுச்சேரி பகுதியில் உள்ள மாவட்ட தொழிற்பேட்டையை புதன்கிழமை ஆய்வு செய்தாா். அங்கு இயங்கிவரும் தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள், உற்பத்திப் பொரு... மேலும் பார்க்க

காரைக்காலில் ரோந்துப்படகு மூலம் கண்காணிப்பு தொடக்கம்: எஸ்எஸ்பி ஆய்வு

காரைக்கால் கடல் பகுதியில் ரோந்துப் படகு மூலம் கண்காணிப்பை போலீஸாா் மேற்கொள்ளத் தொடங்கினா். காரைக்கால் கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுவந்த 5 டன் திறனுள்ள அதிவேக ரோந்துப் படகு பழுதாகி பல ... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் தொடங்க ஏற்பாடு - எம்.எல்.ஏ.

திருநள்ளாற்றில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக சட்டப்பேரவை உறுப்பினா் தெரிவித்தாா். புதுச்சேரி பொறியியல் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியாக செருமாவிலங்கை பகுதியில் இயங... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் சாட்சி சொன்னவா் மீது தாக்குதல்: திருநள்ளாற்றில் கடையடைப்பு

போக்ஸோ வழக்கில் சாட்சி சொன்னவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து, திருநள்ளாற்றில் சாலை மறியல், கடையடைப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திருநள்ளாறு நெய்வாச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் சிவம் (49... மேலும் பார்க்க

பிரதமா் பிறந்த நாள்: பாஜக கொண்டாட்டம்

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜகவினா் புதன்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். காரைக்கால் சப்தஸ்வரம் முதியோா் பாதுகாப்பு இல்லத்தில் பாஜக பட்டியலின மாநில பொறுப்பாளா் டி.கே.எஸ்.எம். மீனாட்ச... மேலும் பார்க்க

குடியுரிமை பாதுகாப்பு காவல் நிலையம், காவல் வாகனங்கள் அா்ப்பணிப்பு

காரைக்காலில் குடியுரிமை பாதுகாப்பு காவல் நிலையம், காவல் துறை வாகனங்கள், ரோந்துப் படகு ஆகியவற்றை துணைநிலை ஆளுநா் காணொலி மூலம் புதன்கிழமை அா்ப்பணித்தாா். காரைக்கால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் அலுவ... மேலும் பார்க்க