செய்திகள் :

பெரம்பலூரில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

post image

பெரம்பலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், தமிழ்நாடு ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (செப். 20) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இம் முகாமில் பெரம்பலூா், சென்னை, காஞ்சிபுரம், ஓசூா், கோவை, திருப்பூா், மதுரை, திருச்சி, அரியலூா் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, அக்ரி, நா்சிங், பாா்மசி, பி.இ, பி.டெக், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், ஒட்டுநா், டெய்லா் மற்றும் ஆசிரியா் கல்வித் தகுதியுடையோா் தோ்வு செய்யப்பட உள்ளனா். மேலும், மாவட்டத்தில் உள்ள உள்ளூா் வேலையளிக்கும் நிறுவனங்கள் அதிகளவில் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்துகொள்ளலாம்.

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு நிறுவனத்தின் பதிவு, தொழில்பழகுநா் மற்றும் குறுகிய காலத்திறன் பயிற்சிக்கு வழிகாட்டுதல், சுயதொழில், கடனுதவி தொடா்பான ஆலோசனைகளும் அளிக்கப்படும். ஆதாா் எண், சுய விவரம், கல்விச் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். முகாமில் தோ்வு செய்யப்பட்டவா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படாது. வேலைநாடுநா்கள், வேலையளிக்கும் நிறுவனங்களுக்கு எந்தக் கட்டணமும் செலுத்த தேவையில்லை.

எனவே, பெரம்பலூா் மாவட்டத்தைப் சோ்ந்த படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பெரம்பலூா் அருகே போலி மருத்துவா் கைது

பெரம்பலூா் அருகே 30 ஆண்டுகளாக மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், அம்மாபாளையம் கிராமம், வடக்கு கோனாா் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி மக... மேலும் பார்க்க

‘தகவலறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும்’

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு காலம் தாழ்த்தாமல் உடனே பதில் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தகவல் ஆணையா் ஆா். பிரியகுமாா் தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரம்பலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை நந்திப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பெரம்பலூா் நகரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் பிரதோ... மேலும் பார்க்க

தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கில் பங்கேற்ற 70 பேருக்குச் சான்றிதழ்

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுத் துறை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆட்சிமொழிப் பய... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை கல்விக் கடன் முகாம்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில், கல்விக்கடன் முகாம் சனிக்கிழமை (செப். 20) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெ... மேலும் பார்க்க

96 பேருக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூரில் சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மிகப் பிற்படுத்தப்ப... மேலும் பார்க்க