நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
பெரம்பலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை நந்திப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
பெரம்பலூா் நகரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை ஈசன் மற்றும் அதிகார நந்திக்கு பால், தயிா், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பித்து பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய ஈசன், கோயில் உள்பிரகாரத்தை 3 முறை வலம் வந்து அருள்பாலித்தாா். பூஜைகளை கௌரி சங்கா், முல்லை சிவாச்சாரியாா் ஆகியோா் செய்தனா். இதில் முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட திரளான சிவ பக்தா்கள் வழிபட்டனா்.
இதேபோல, வாலிகண்டபுரம் வாலீஸ்வரா், சு.ஆடுதுறை குற்றம்பொறுத்தீஸ்வரா், குரும்பலூா் பஞ்சநந்தீஸ்வரா், வெங்கனூா் விருத்தாச்சலேஸ்வரா், திருவாளந்துறை தோளீஸ்வரா், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரா், காசிவிஸ்வநாதா் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதி சிவன் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் வழிபட்டனா்.