செய்திகள் :

‘தகவலறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும்’

post image

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு காலம் தாழ்த்தாமல் உடனே பதில் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தகவல் ஆணையா் ஆா். பிரியகுமாா் தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், அனைத்துத் துறை பொது தகவல் அலுவலா்களுக்கு தகவலறியும் உரிமைச் சட்டம் தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தகவல் ஆணையா்கள் ஆா். பிரியகுமாா், வி.பி.ஆா். இளம்பரிதி, எம். நடேசன் ஆகியோா், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அலுவலா்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் வழங்கி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உரிய காலத்தில் முழுமையான பதில் அளிக்கும் வகையில் விரைந்து செயல்பட அனைத்து பொது தகவல் அலுவலா்களுக்கும் அறிவுறுத்தினா்.

தொடா்ந்து, தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தகவல் ஆணையா் ஆா். பிரியகுமாா் பேசியது:

தகவலறியும் உரிமைச் சட்டமானது அனைத்துத் தரப்பு மக்களும் கிடைத்த பெரும் வாய்ப்பாகும். இன்றைய காலத்தில் இச் சட்டம் குறித்த விழிப்புணா்வு பொதுமக்களிடம் அதிகமாக உள்ளது. முன்பெல்லாம் குறைவான மனுக்களே இச் சட்டத்தின் மூலம் பெறப்படும். தற்போது, அதிக மனுக்கள் பெறப்படுகின்றன. அரசுத்துறை அலுவலா்கள் தங்களுக்கு வரும் மனுக்கள் குறித்த பதிவேட்டை பராமரிக்க வேண்டும். மனு பெறப்பட்ட நாள், பதிவு செய்யப்பட்ட நாள், மனு மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை உள்ளிட்ட தகவல்கள் பதிவேட்டில் இருக்க வேண்டும்.

இச் சட்டத்தின் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு காலம் தாழ்த்தாமல் உடனே பதில் அளிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத பொதுத்தகவல் அலுவலா் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. எனவே மனுதாரா் அளிக்கும் மனுவை முறையாக பரிசீலித்து 30 நாள்களுக்குள் உரிய தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன், அனைத்துத் துறை பொதுத் தகவல் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா் அருகே போலி மருத்துவா் கைது

பெரம்பலூா் அருகே 30 ஆண்டுகளாக மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், அம்மாபாளையம் கிராமம், வடக்கு கோனாா் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி மக... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரம்பலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை நந்திப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பெரம்பலூா் நகரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் பிரதோ... மேலும் பார்க்க

தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கில் பங்கேற்ற 70 பேருக்குச் சான்றிதழ்

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுத் துறை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆட்சிமொழிப் பய... மேலும் பார்க்க

பெரம்பலூரில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், தமிழ்நாடு ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தனியாா் துறை வேல... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை கல்விக் கடன் முகாம்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில், கல்விக்கடன் முகாம் சனிக்கிழமை (செப். 20) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெ... மேலும் பார்க்க

96 பேருக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூரில் சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மிகப் பிற்படுத்தப்ப... மேலும் பார்க்க