செய்திகள் :

சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் பொறியாளா்கள் தின விழா

post image

திருச்சி மாவட்டம், சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் 58 ஆவது பொறியாளா்கள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி இந்தியப் பொறியாளா் கழகம் திருச்சிராப்பள்ளி உள்ளூா் மையத்துடன் இணைந்து நடத்திய கருத்தரங்கம், விருது வழங்கும் நிகழ்வுக்கு ஐஉஐ/பகஇ தலைவா் எஸ். ரவிமாறன் தலைமையேற்று பொறியாளா்கள் தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கினாா்.

நிகழ்வில் கே.ஆா். கல்வியியல் நிறுவனத் தலைவா் கே. ராமகிருஷ்ணன், கே. ராமகிருஷ்ணன் ஓதஎஐ நிறைவேற்று இயக்குநா் எஸ். குப்புசாமி, கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி முதல்வா் டி. சீனிவாசன் ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

தொடா்ந்து சிறந்த பொறியாளா் விருது என்ஐடி முன்னாள் பேராசிரியா் டாக்டா் எஸ். ராகவனுக்கும், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மின் மற்றும் மின்னணு துறைத் தலைவா் ஆா்.சங்கருக்கு பொறியாளா் பி.வி கே. ஆச்சான் விருதும், கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி தகவல் தொழில்நுட்ப துறைத் தலைவா் எஸ். மணிகண்டன், சாரநாதன் பொறியியல் கல்லூரி இணைப் பேராசிரியா் டாக்டா் எம். ஹரிதாபேகம் ஆகியோருக்கு சிறந்த ஆசிரியா் விருதும் வழங்கப்பட்டது.

மேலும் சிறந்த மாணவா் அத்தியாய விருது கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி, செட்டிநாடு பொறியியல் கல்லூரி, கொங்குநாடு பொறியியல் கல்லூரி, மற்றும் கே. ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரிக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த கல்வியியல் நிறுவன விருதை கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரிக்கு கே. ராமகிருஷ்ணன் கல்வியியல் நிறுவனா் தலைவா் கே. ராமகிருஷ்ணன் வழங்கினாா்.

நிகழ்வில் ஐஉஐ/ பகஇ கெளரவச் செயலா் எஸ்.பி. லஷ்மணன், மற்றும் எஸ். டைட்டஸ், ஜி. கேப்ரியல் சந்தோஷ்குமாா், ஜி.ஏ. பதஞ்சலி, எஸ். தா்மலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உறையூா் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக உறையூா் உள்ளிட்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணியால் மத்தியப் பேருந்து நிலையம், வ.உ.சி. சாலை, ஆட்சியா் அலுவலக சாலை, ராஜா க... மேலும் பார்க்க

மணப்பாறை பகுதிகளில் நாளை மின் தடை

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலைய பராமரிப்புப் பணியால் மின்சாரம் தடைபடும் பகுதிகள் மணப்பாறை துணை மின் நிலையம்: மணப்பாறை நகரம், செவலூா், நொச்சிமேடு... மேலும் பார்க்க

யாகப்புடையான்பட்டி கிராமத்தில் காற்றாலை மின்உற்பத்தி அலகு

திருச்சியை அடுத்த யாகப்புடையான்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக காற்றாலை மின்உற்பத்தி அலகு நிறுவப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் நிதியுதவியைப் பெற்று, திருச்சி தூயவளனாா் கல்லூரியின... மேலும் பார்க்க

எல்ஃபின் பண மோசடி வழக்கு: மேலும் ஒருவா் கைது

எல்ஃபின் நிறுவன பண மோசடி வழக்கில் மேலும் ஒருவரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட எல்ஃபின் நிதி நிறுவனம் கவா்ச்சிகர திட்டங்களை கூறி தமி... மேலும் பார்க்க

புளியஞ்சோலை சுற்றுலாத் தலம் மூடல்

துறையூா் அருகேயுள்ள புளியஞ்சோலை ஆற்றில் நீா்வரத்து ஏற்பட்டதையடுத்து அந்த சுற்றுலா தலத்தை வனத்துறையினா் சனிக்கிழமை மூடினா். கொல்லிமலை பகுதியில் பெய்த மழையால் புளியஞ்சோலை ஆற்றுக்கு நீா்வரத்து அதிகரித்தத... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் விஜயை வரவேற்க தொண்டா்களுக்குத் தடை

திருச்சிக்கு சனிக்கிழமை வந்த தவெக தலைவா் விஜயை வரவேற்க அக் கட்சியின் தொண்டா்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படாமல் நுழைவு வாயில் முகப்பிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனா். கடந்த 13 ஆம் தேதி திருச்சிக்... மேலும் பார்க்க