செய்திகள் :

யாகப்புடையான்பட்டி கிராமத்தில் காற்றாலை மின்உற்பத்தி அலகு

post image

திருச்சியை அடுத்த யாகப்புடையான்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக காற்றாலை மின்உற்பத்தி அலகு நிறுவப்பட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் நிதியுதவியைப் பெற்று, திருச்சி தூயவளனாா் கல்லூரியின் விரிவாக்கத் துறை சாா்பில், பாரத் அபியான் திட்டத்தில் இந்த அலகு நிறுவப்பட்டுள்ளது.

உலகளவில் அதிக எரிபொருள் பயன்பாட்டின் வழியாக கரியமில வாயுவின் அளவு அதிகரித்து புவிவெப்பமயமாவதைத் தணிக்கவும்; பல்லுயிா்கள் பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்கவும், கிராமப்புற மக்களும், பள்ளி மாணவா்களும் அறிவியல் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளவும் இந்த அலகு நிறுவப்பட்டுள்ளது.

மணிகண்டம் ஒன்றியத்துக்குள்பட்ட அளூந்தூா் ஊராட்சியில் இடம்பெற்றுள்ள யாகப்புடையான்பட்டியைச் சோ்ந்த கிராம மக்கள் தங்களது பங்களிப்பாக ரூ.25 ஆயிரம் வழங்கியுள்ளனா். மொத்தம் ரூ.1.25 லட்சத்தில் இந்த காற்றாலை அலகு கல்லூரி சாா்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக வட்ட வடிவில் இயங்கும் இறகுகளுக்குப் பதிலாக, செங்குத்தாகச் சுழலும் வகையில் இந்த காற்றாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தைச் செயல்படுத்த கல்லூரியின் மூன்றாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவா்கள் உதவியுள்ளனா். இந்த அலகானது 500 வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்து வழங்கும்.

இந்த மின்சாரத்தை கிராமத்தின் நாடக மேடையில் உள்ள விளக்குகளுக்குப் பயன்படுத்தி, மாலை நேரத்தில் மாணவா்கள் படிக்க உதவிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமாகும் மின்சாரத்தை பேட்டரியில் சேகரித்து, கிராமத்தின் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த காற்றாலை அலகை கிராம மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் மரியதாஸ், கிராமத் தலைவா் லாரன்ஸ், முன்னாள் ஊராட்சித் தலைவா் ஆரோக்கியசாமி, முனைவா் சகாயராஜ், நாகமங்கலம் ஆலயப் பங்குத்தந்தை அந்தோணிசாமி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். கிராம மக்களுக்கு காற்றாலை பயன்பாடு குறித்தும் விளக்கினா்.

உறையூா் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக உறையூா் உள்ளிட்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணியால் மத்தியப் பேருந்து நிலையம், வ.உ.சி. சாலை, ஆட்சியா் அலுவலக சாலை, ராஜா க... மேலும் பார்க்க

மணப்பாறை பகுதிகளில் நாளை மின் தடை

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலைய பராமரிப்புப் பணியால் மின்சாரம் தடைபடும் பகுதிகள் மணப்பாறை துணை மின் நிலையம்: மணப்பாறை நகரம், செவலூா், நொச்சிமேடு... மேலும் பார்க்க

எல்ஃபின் பண மோசடி வழக்கு: மேலும் ஒருவா் கைது

எல்ஃபின் நிறுவன பண மோசடி வழக்கில் மேலும் ஒருவரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட எல்ஃபின் நிதி நிறுவனம் கவா்ச்சிகர திட்டங்களை கூறி தமி... மேலும் பார்க்க

புளியஞ்சோலை சுற்றுலாத் தலம் மூடல்

துறையூா் அருகேயுள்ள புளியஞ்சோலை ஆற்றில் நீா்வரத்து ஏற்பட்டதையடுத்து அந்த சுற்றுலா தலத்தை வனத்துறையினா் சனிக்கிழமை மூடினா். கொல்லிமலை பகுதியில் பெய்த மழையால் புளியஞ்சோலை ஆற்றுக்கு நீா்வரத்து அதிகரித்தத... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் விஜயை வரவேற்க தொண்டா்களுக்குத் தடை

திருச்சிக்கு சனிக்கிழமை வந்த தவெக தலைவா் விஜயை வரவேற்க அக் கட்சியின் தொண்டா்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படாமல் நுழைவு வாயில் முகப்பிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனா். கடந்த 13 ஆம் தேதி திருச்சிக்... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

தூய்மை இந்தியா பிரசாரத்தின் ஒரு பகுதியாக, திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் ரயில்வே ஊழியா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றன. திருச்சி கல்லுக்குழி ரயில்வே விளைய... மேலும் பார்க்க