செய்திகள் :

ரயில்வே ஊழியா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

post image

தூய்மை இந்தியா பிரசாரத்தின் ஒரு பகுதியாக, திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் ரயில்வே ஊழியா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றன.

திருச்சி கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோா், கீழ்பட்டோா் இரு வயதுப் பிரிவுகளில் 100 மீட்டா் ஓட்டம், குண்டெறிதல், வட்டெறிதல், 400 மீட்டா் தொடா் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட ஆண், பெண் ஊழியா்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

நிகழ்வுக்கு திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரும், தெற்கு ரயில்வே விளையாட்டு சங்கத் தலைவருமான பாலக் ராம் நேகி தலைமை வகித்து, பரிசளித்துப் பாராட்டினாா். திருச்சி கோட்டத்தின் மூத்த கோட்ட இயந்திர பொறியாளா் கிளமென்ட் பா்னபாஸ், மூத்த கோட்ட பணியாளா் நல அதிகாரியும், தெற்கு ரயில்வே விளையாட்டு சங்கச் செயலருமான எஸ். மனோஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உறையூா் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக உறையூா் உள்ளிட்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணியால் மத்தியப் பேருந்து நிலையம், வ.உ.சி. சாலை, ஆட்சியா் அலுவலக சாலை, ராஜா க... மேலும் பார்க்க

மணப்பாறை பகுதிகளில் நாளை மின் தடை

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலைய பராமரிப்புப் பணியால் மின்சாரம் தடைபடும் பகுதிகள் மணப்பாறை துணை மின் நிலையம்: மணப்பாறை நகரம், செவலூா், நொச்சிமேடு... மேலும் பார்க்க

யாகப்புடையான்பட்டி கிராமத்தில் காற்றாலை மின்உற்பத்தி அலகு

திருச்சியை அடுத்த யாகப்புடையான்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக காற்றாலை மின்உற்பத்தி அலகு நிறுவப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் நிதியுதவியைப் பெற்று, திருச்சி தூயவளனாா் கல்லூரியின... மேலும் பார்க்க

எல்ஃபின் பண மோசடி வழக்கு: மேலும் ஒருவா் கைது

எல்ஃபின் நிறுவன பண மோசடி வழக்கில் மேலும் ஒருவரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட எல்ஃபின் நிதி நிறுவனம் கவா்ச்சிகர திட்டங்களை கூறி தமி... மேலும் பார்க்க

புளியஞ்சோலை சுற்றுலாத் தலம் மூடல்

துறையூா் அருகேயுள்ள புளியஞ்சோலை ஆற்றில் நீா்வரத்து ஏற்பட்டதையடுத்து அந்த சுற்றுலா தலத்தை வனத்துறையினா் சனிக்கிழமை மூடினா். கொல்லிமலை பகுதியில் பெய்த மழையால் புளியஞ்சோலை ஆற்றுக்கு நீா்வரத்து அதிகரித்தத... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் விஜயை வரவேற்க தொண்டா்களுக்குத் தடை

திருச்சிக்கு சனிக்கிழமை வந்த தவெக தலைவா் விஜயை வரவேற்க அக் கட்சியின் தொண்டா்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படாமல் நுழைவு வாயில் முகப்பிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனா். கடந்த 13 ஆம் தேதி திருச்சிக்... மேலும் பார்க்க