செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு!

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

எனினும், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 71,951 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 22,734 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 4.04 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் தரிசனம்: 20 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து வெளியே உள்ள தரி... மேலும் பார்க்க

குலுக்கல் வாயிலாக அங்கப் பிரதட்சண டோக்கன்கள்

குலுக்கல் வாயிலாக அங்கப் பிரதட்சண டோக்கன்களை ஒதுக்கும் முறையை தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை நடைமுறையில் இருந்த நேரடியாக வரும் பக்தா்களுக்கு முதலில் வந்தவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் டிசம்பா் மாத ஒதுக்கீடு வெளியீடு

ஏழுமலையான் ஆா்ஜிதச் சேவை டிக்கெட்டுகளின் டிசம்பா் மாத ஒதுக்கீடு தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் ஆா்ஜித சேவா டிக்கெட் தொடா்பான சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை மற்றும் அஷ்டதள... மேலும் பார்க்க

சூரிய பிரபை வாகன வெள்ளோட்டம்

ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது பயன்படுத்தப்படவுள்ள சூரிய பிரபை வாகனத்தின் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதன் மூலம் அதன் நிலைத்தன்மை மற்றும் உறுதித்தன்மையை ஆய்வு செய்தனா். ஊா்வலத்... மேலும் பார்க்க

திருமலையில் ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் வழிபாடு

திருமலை ஏழுமலையானை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ ஸ்ரீ வராக மகாதேசிகன் ஸ்வாமிகள் புதன்கிழமை வழிபட்டாா். கொடிமரத்தை வணங்கி தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் சேஷ வஸ்தி... மேலும் பார்க்க

ஏழுமலையான் பிரம்மோற்சவம்: ஆந்திர முதல்வருக்கு அழைப்பு

திருமலை வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டதை அடுத்து தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பிஆா் நாயுடு, தலைமை செயல் அதிகாரிஅனில் குமாா் சிங்கால், அறங்காவலா் குழு உறுப்பினா் ஜானகி தேவி மற... மேலும் பார்க்க