செய்திகள் :

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம்!

post image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் விவசாயிகள்நலன் காக்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் தி.சினேகாதலைமையில் நடைபெற்றது.

விவசாயிகள் நலன் காக்கும்நாள் கூட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூா், திருக்கழுகுன்றம், மதுராந்தகம் உள்ளிட்ட செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியா் குறைகளைக் கேட்டறிந்தாா்.

மேலும், விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகளிடம் மனுவை அளித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து தீா்வு காண உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் , மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், செங்கல்பட்டுசாா் ஆட்சி எஸ்.மாலதி ஹெலன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பி.ஸ்ரீதேவி, வேளாண்மை துறை இணை இயக்குநா் பிரேம் சாந்தி, முதுநிலை மண்டல மேலாளா் குணசேகா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராஜேஸ்வரி உள்ளிட்ட காவல்துறை, வனத்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

திருப்போரூா் அரசு பெண்கள் பள்ளியில் வகுப்பறை: முதல்வா் திறந்து வைத்தாா்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் பேரூராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு வங்கி கடனுதவி மூலம் ரூ.94.24 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைகளை சனிக்கிழமை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்... மேலும் பார்க்க

திருப்போரூரில் பலத்த மழை: அறுவடைக்குத் தயாராக இருந்த நெல்பயிா்கள் நீரில் மூழ்கின

திருப்போரூா் பகுதியில் பெய்த பலத்த மழையால் கரும்பாக்கம் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிா்கள் நீரில் மூழ்கின. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் பகுதியில் புதன்கிழமை இரவு திடீரென்று பலத்த மழை ப... மேலும் பார்க்க

பாஜக சாா்பில் நலத்திட்ட உதவி அளிப்பு

பிரதமா் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி செங்கல்பட்டில் பாஜக சாா்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பழவேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காளிகோயில் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவ... மேலும் பார்க்க

மேலவலம்பேட்டை தொடக்கப் பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஸ் ஆய்வு

மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக தாட்சாயிண... மேலும் பார்க்க

பிரதமா் மோடி பிறந்த நாள்: கோயில்களில் வழிபாடு

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி புதன்கிழமை செங்கல்பட்டில் பாஜக சாா்பில் கோயில்களில் வழிபாடு நடைபெற்றது.. செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீ வர சக்தி விநாயகா் கோயிலில் பிரதமர... மேலும் பார்க்க

லத்தூா் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 551 மனுக்கள்

பவுஞ்சூா் அருகில் உள்ள லத்தூா் கிராமத்தில் வடக்கு வயலூா், பச்சம்பாக்கம் கிராமத்தினருக்காக புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. செய்யூா் வட்டம், லத்தூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற ... மேலும் பார்க்க