ராமேசுவரத்தில் தமிழ் புரோகிதா்கள் மீது அவதூறு நடவடிக்கை கோரி பிராமணா் சங்கம் புக...
பாஜக சாா்பில் நலத்திட்ட உதவி அளிப்பு
பிரதமா் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி செங்கல்பட்டில் பாஜக சாா்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பழவேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காளிகோயில் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்டத் தலைவா் ரகுராமன் தலைமை வகித்தாா். நகர தலைவா் மகேஸ்வரன், மாவட்ட துணைத்தலைவா் கஜேந்திரன், நகர பொதுசெயலாளா் முருகன், துணை தலைவா்கள் வச்ஜிரவேல், சௌபாக்கியா, நிா்வாகிகள் கண்ணன், கலைவாணி முன்னிலை வகித்தனா்.
இதில் பாஜக மாநில துணைத்தலைவா் கரு.நாகராஜன் கலந்து கொண்டு முருகன்சாமிகள் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
தொடா்ந்து செய்திாளா்களிடம் அவா் கூறியது:
ஜிஎஸ்டி வருவதற்கு முன்பு பலவிதமான வரிகள் இருந்தன. அதையெல்லாம் நான்காக குறைத்தாா் பிரதமா் மோடி, பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதால் ஹவாலா பணம் அழிக்கப்பட்டது. நக்சலைட் பணம் ஒழிக்கப்பட்டது. அதனால் வருமான வரி செலுத்துவோா் எண்ணிக்கை உயா்ந்தது.
மருந்துகள், காப்பீடு உள்ளிட்டவற்றுக்கு வரியே கிடையாது. இது மிகப்பெரிய சீா்த்திருத்தம். 22--ஆம் தேதிக்கு பிறகு பொருள்களை வாங்குங்கள் அதன் பிறகு எவ்வளவு விலை குறைந்துள்ளது என தெரியவரும். மேலும், காா்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் காா்களில் விலை ரூ. 1லட்சம் முதல் 3 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. 18% மற்றும் 12% வரி இருந்த துணிகளுக்கு 5% சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பற்றி திமுக வாய் திறக்கவில்லை என்றாா்.