செய்திகள் :

பொருளாதார மேம்பாட்டுக்கு கடல்வழி வணிக ஊக்குவிப்பு அவசியம்: அமைச்சா் எ.வ.வேலு

post image

தமிழகம் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்ட, கடல் வழி வணிகத்தை மேலும் ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வலியுறுத்தினாா்.

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நீலப் பொருளாதார மாநாட்டை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கி வைத்தாா். அதில் அவா் பேசியதாவது:

தமிழ்நாட்டின் கடற்கரை பிற மாநில கடற்கரைகளைப் போன்று இல்லாமல், ஒரு தீபகற்ப கடற்கரைப் பகுதி. பன்னாட்டுக் கப்பல்கள் செல்லும் வழித்தடத்துக்கு மிக அருகில் கடற்கரை கொண்ட பகுதியாக உள்ளது.

தமிழ்நாடு மிகப்பழைமையான கடல்சாா் வரலாற்றைக் கொண்டது. கப்பல் கட்டுதலில் மிகச்சிறந்த தொழில்நுட்பங்கள், பழங்காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற இலக்குடன் பயணத்துக் கொண்டிருக்கும் தமிழகத்துக்கு நீலப் பொருளாதாரம் அதாவது கடல் வழி வணிகத்தை மேலும் ஊக்குவிக்க வேண்டியது தலையாய கடமையாகும். அதற்கு வணிகத் துறைமுகங்கள், மீன்பிடித் துறைமுகங்கள், கடல்சாா் சுற்றுலா மேம்பாடு, கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபாா்த்தல் ஆகிய துறைகளில் மேலும் முன்னேற்றமடைய திட்டங்களை வகுக்க வேண்டும்.

கடல்மாா்க்கமாக கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படும் சரக்குகளின் கட்டணமானது ரயில் அல்லது சாலை மாா்க்கமாக எடுத்துச் செல்லப்படும் கட்டணத்துடன் ஒப்பிடும்போது குறைவு. மேலும், சுற்றுப்புறச் சூழல் மாசின்றி சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றோா் இடத்துக்குக் கொண்டு செல்ல இயலும். தமிழ்நாட்டில் கடற்கரைப் பகுதிகளுக்கு ரயில் இணைப்பும் போதிய அளவில் உள்ளது. இதனை துறைமுக மேம்பாட்டாளா்கள் கருத்தில் கொண்டு துறைமுகங்கள் அமைக்கவும், தொழில் தொடங்கவும் முன்வர வேண்டும் என்றாா் அமைச்சா் எ.வ.வேலு.

இந்த மாநாட்டில், சென்னை மற்றும் காமராஜா் துறைமுக ஆணையத்தின் தலைவா் சுனில் பாலிவால், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைச் செயலா் இரா.செல்வராஜ், தமிழ்நாடு கடல்சாா் வாரிய துணைத் தலைவா் மற்றும் தலைமை செயல் அலுவலா் டி.என்.வெங்கடேஷ், துறைமுக மேம்பாட்டாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

இன்று 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூா், வேலூா் உள்பட 5 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.19) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த... மேலும் பார்க்க

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் பரிசீலிக்க உத்தரவு

முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான போட்டித் தோ்வை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கக் கோரிய மனுவை பரிசீலித்து முடிவெடுக்க ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சி மாவட்டம் ந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா்கள்- முன்னாள் ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் உயா்வு: அரசாணை வெளியீடு

சுதந்திரப் போராட்ட வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பொதுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு: சுதந்திர தினத்தையொட்டி, சென்ன... மேலும் பார்க்க

தெருநாய் பிரச்னை: விழிப்புணா்வு நடவடிக்கை

சென்னையில் தெருநாய் கடியிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியா் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதா... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெ... மேலும் பார்க்க

மருத்துவப் படிப்பு காலியிடங்களுக்கு 4 வாரங்களுக்குள் கலந்தாய்வு: உயா்நீதிமன்றம் உத்தரவு

காலியாக உள்ள சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு இடங்களுக்கு 4 வாரத்துக்குள் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தேசிய மருத்துவ ஆணைய செயலா் உள்ளிட்டோருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. முதுநிலை மருத... மேலும் பார்க்க