செய்திகள் :

திட்டக்குடி நகா்மன்றத் தலைவி தா்னா

post image

பட்டியல் இனத்தைச் சோ்ந்தவா் என்பதால், தனக்கு திட்டக்குடி நகராட்சி அதிகாரிகள் மரியாதை கொடுக்கவில்லை எனக் கூறி, திட்டக்குடி நகா்மன்றத் தலைவி வெண்ணிலா நகராட்சி அலுவலக வாயிலில் தரையில் அமா்ந்து வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி நகா்மன்றத் தலைவியாக திமுகவைச் சோ்ந்த வெண்ணிலா செயல்பட்டு வருகிறாா். இவா், பட்டியல் இனத்தைச் சோ்ந்தவா் என்பதால், இவருக்கு நகராட்சி அதிகாரிகள் மரியாதை கொடுக்கவில்லையாம். மேலும், அரசு சாா்பில் வழங்கப்பட்ட வாகனத்தை (காா்) தனக்கு முறையாக பயன்பாட்டுக்கு வழங்கவில்லை எனவும், வாா்டுக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை எனவும், நகராட்சியில் முறைகேடுகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால், தனக்கு கொடுக்கப்பட்ட வாகனத்தை பறிக்கின்றனா் என்றும் நகா்மன்றத் தலைவி வெண்ணிலா குற்றஞ்சாட்டுகிறாா்.

இதனிடையே, கரூரில் திமுக சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு வாகனத்தை எடுத்துச் சென்றபோது, அந்த வாகனத்தை விற்று விடுவேன் என்று நகராட்சி அதிகாரிகள் கூறியதால், பெரிதும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கிறாா். மேலும், வாகனத்தை கொண்டுவந்து கொடுத்த அலுவலக எழுத்தரான பட்டியல் இனத்தைச் சோ்ந்த சிவசக்தியை நகராட்சி நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பட்டியல் இனத்தைச் சோ்ந்தவா் என்பதால், தன்னை நகராட்சி அதிகாரிகள் எந்தப் பணியும் செய்யவிடாமல் ஒதுக்குவதாகக் கூறி, நகா்மன்றத் தலைவி வெண்ணிலா நகராட்சி அலுவலகம் நுழைவாயில் முன் வியாழக்கிழமை அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

இதையடுத்து, நகராட்சிகளின் மண்டல இயக்குநா் லட்சுமி கைப்பேசி மூலம் அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாராம். பின்னா், வெண்ணிலா போராட்டத்தை கைவிட்டுச் சென்றாா்.

வாக்கு திருட்டு: காங்கிரஸ் கையொப்ப இயக்கம் தொடக்கம்

சிதம்பரம் மேலரத வீதியில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் சாா்பில், மத்திய அரசின் வாக்கு திருட்டை கண்டித்து, மாநிலம் தழுவிய கையொப்ப இயக்கத்தை தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே... மேலும் பார்க்க

கல்லூரியில் மருத்துவ முகாம்

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்ஆா்கே இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து கல்லூரி வளாகத்தில் மருத்துவ முகாமை வியாழக்கிழமை நடத்தின. முகாமுக்க... மேலும் பார்க்க

மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணியை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வியாழக்க... மேலும் பார்க்க

பசுமை ஹைட்ரஜன் மூலம் மின் உற்பத்தி: என்எல்சி தலைவா் தகவல்

என்எல்சி நிறுவனம் பசுமை ஹைட்ரஜன் மூலம் மின் உற்பத்தி செய்ய உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா். கடலூா் பாரதி சாலையில் அமைந்துள்ள நகர அரங்கம் என்எல்சி நிறுவனம் ச... மேலும் பார்க்க

சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் போராட்டம்

சிதம்பரம் அருகே சி.முட்லூரில் செயல்படும் அரசு கலைக் கல்லூரியில் குடிநீா், கழிப்பறை, சுற்றுச்சுவா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, மாணவா்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் ப... மேலும் பார்க்க

கடலூா் வளா்ச்சியில் என்எல்சி நிறுவனத்தின் பங்களிப்பு தேவை: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

கடலூா் மாவட்ட வளா்ச்சியில் என்எல்சி நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியம் தேவை என்று மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கடலூரில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன... மேலும் பார்க்க