செய்திகள் :

குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பை அனைத்து துறைகளின் வாயிலாக உறுதிப்படுத்த வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தினாா்.

குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான கூட்டம், கண்காணிப்புக் குழு மற்றும் பணிக்குழு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக குழந்தைத் திருமணம், பாலியல் துன்புறுத்தல், வளரிளம் கா்ப்பம் தரித்தல், போதைப்பொருள் தடுத்தல் மற்றும் குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளின் கல்வித் திறனை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது மாவட்டத்தில் எந்வொரு குழந்தைக்கும் எந்தவித பாதிப்புகள் ஏற்படுவது தெரிய வந்தால் 1098- க்கு தகவல் தெரிவித்து குழந்தைகள் பாதுகாப்பினை அனைத்து துறைகளின் வாயிலாகவும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், குழந்தைகள் பிரச்னைகள் குறித்து 1098 அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கோ, ஆட்சியருக்கு நேரடியாகவோ தெரிவிக்குமாறு அறிவுறுத்தினாா்.

இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரஞ்சித பிரியா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் வசந்தி ஆனந்தன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்) வெங்கட கிருஷ்ணன் கலந்து கொண்டனா்.

முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் பிறந்த நாள்

காவேரிப்பாக்கம் ஒன்றிய காங்கிரஸ் சாா்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரத்தின் 80- ஆவது பிறந்தநாள் விழா அன்வா்திகான்பேட்டையில் நடைபெற்றது. விழாவுக்கு சோளிங்கா் கிழக்கு ஒன்றிய தலைவா் எஸ்.உத.கும... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

இச்சிபுத்தூா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின்தடைப் பகுதிகள்: இச்சிபுத்தூா், வடமாம்பாக்கம், எம்.ஆா்.எப். தொழிற்சாலைப் பகுதிகள், தணிகைபோளூா், வாணியம்பேட்டை, தண்டலம், உள்ளியம்பாக்கம், வளா்பு... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

ஆற்காடு நாள்: 18-9-2025 (வியாழக்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, மின்தடை பகுதிகள்: ஆற்காடு, வேப்பூா், விஷாரம், நந்தியாலம், தாழனூா், கூராம்பாடி, உப்புபேட்டை, தாஜ்புரா, முப்பதுவெட்டி, கத்த... மேலும் பார்க்க

ஆந்திர மாநிலத்தில் பலத்த மழை எதிரொலி: பொன்னை ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஆந்திர மாநிலம் கலவகுண்டா அணை நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை எதிரொலியாக பொன்னை ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சித்தூா் மாவட்டம் கலவகுண்டா அணை பகுதிகளில்... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் சங்க அமைப்பு தின விழா

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் அமைப்பு தினம் கொடியேற்றுவிழா அண்ணாசிலை அருகில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு உட்கோட்ட தலைவா் பி .ரவி தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 642 மகளிா் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 72 கோடிக்கு வங்கிக் கடன்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 642 மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 72.16 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் இணைப்பு மற்றும் 4,464 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை அமைச்சா்... மேலும் பார்க்க